செவ்வாய், 19 மே, 2026

4.மலை வெள்ளாளர் தோலன் பிள்ளன் கல்வெட்டு (4.Malai Vellalar's inscriptions )

4.மலை வெள்ளாளர் தோலன் பிள்ளன் கல்வெட்டு 


ஊர் : கோயம்புத்தூர்
அரசு : வீரகேரளர்
மன்னன் : வீரநாராயணன்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
இடம்:சங்கமேசுவரர் கோயில் கருவறை வடக்குக் குமுதம்

விளக்கம்:

வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளன் ஆன திருஞானசம்பந்தன் என்பான் சங்கீசுவரரர் கோயிலில் திருக்கார்த்திகை நாளில் இறைவன் எழுந்தருளவும், திருஅமுதுக்கும் அச்சுக்காசுகள் கொடையளித்தமை பற்றி இக்கல்வெட்டு கூறுகின்றது.

கல்வெட்டு:

1. ஷ்வஸ்தி ஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு ஆறாவது வீரகேரள நல்லூர் வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளநான திருஞாநசம்பன்தந்

2. நேன் ஆளுடையார் சங்கீசுவரமுடையாற்குத் திருக்காத்திகைக்கு எழுந்தருளுகைக்கு... அற்றைக்கு அமுதவெஞ்சநாதிகளுக்கும் நான்னொடுக்கிந அச்சு... ஒன்றும் சந்திராதித்தவரை இருக்கின்ற... திருஞானசம்பந்தர் நல்லூர்

( "பிள்ளன்"என்னும் குலம் கொல்லிமலை மற்றும் பச்சை மலை காராளர்(மலையாளி) மக்களிடையே இன்றும் வழக்கத்தில் உள்ளது.)
மலை வெள்ளாளர்கள் என்பவர்கள் கொல்லி மலையிலிருந்து கோவை மற்றும் ஈரோடு மாவட்ட பகுதிகளுக்கு சென்று விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.பின் பஞ்சம், கொள்ளை மற்றும் போரின் காரணங்களால் அங்கிருந்து ஈரோடு மலை பகுதிக்கு சென்று மலை விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.)
(இவர்களுக்கு மலையாளி,மலை முதலி,மலையாள முதலி,மலையாள கவுண்டர், மலைக்கவுண்டர்,காராளர், காராள முதலி மற்றும் காராளக் கவுண்டர் என்பவை பிற பெயர்கள் ஆகும்.)

நன்றி - கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் புத்தகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக