வெள்ளி, 4 ஜனவரி, 2019

கரிராமன்(Kari Raman) என்கிற கரிவரதராஜ(Kari Varatharaja) பெருமாள்

கரிராமன் என்கிற கரி வரதராச பெருமாள்

                    கரிராமன் என்னும் கடவுள் மலையாள கவுண்டர் என்னும் காராளர் மக்களால் வணங்கப்படும் முதன்மை கடவுள் ஆகும்.இவ்வினத்தில் ஒரு  குறிப்பிட்ட குலம் இக்கடவுளை குலசாமியாக வணங்குகிறது.
             இக்கடவுள் பெயர் கரிவரதராஜ பெருமாள் என்றாலும் நாயக்கர் காலத்தில் தான் கரிராமன் என்ற பெயர் வந்திருக்கும் என நான் கருதுகிறேன்.கிருஷ்ணகிரிக்கு உட்பட்ட ஒரு கரிராமன் கோவில் ஜாகிர்தார் முறை காலத்தில் கட்டப்பட்டுள்ளது,அதில் இருக்கும் மூலவர் கரிவரதப்பெருமாள் ஆயினும் கரிராமன் என்றே அழைக்கப்படுகிறார்.பெருமாள் ஏன் ராமன் என அழைக்கடுகிறார் என தெரியவில்லை.இவ்வின மக்களை கேக்கும் பொழுது ராமனும் பெருமாள் அவதாரம் என்பதால் அப்படி அழைக்கிறோம் என்கின்றனர்.
       மலையாளக்கவுண்டர்கள் பிரிந்து இடம்விட்டு இடம் செல்லும் போது தன்னோடு குலசாமியையும் கொண்டுசெல்கின்றனர்.அப்போது பொருளாதார சூழ்நிலை காரணமாக சிலை வைக்க முடியாமல்,கரிராமனுக்கு பதிலாக கற்க்களையே வைத்து வழிபடுகின்றனர்.பின் சில தலைமுறைக்கு பின்னால் கரிவரதராச கடவுளின் சிலை வடிவத்தை மறந்து,கோவில் கட்டி சிலை வைக்கும் போது ராமன் சிலையை வைத்து விடுகின்றனர்.இப்படி அறியாமையில் அமர்ந்த நிலையில் இருக்கும் விஷ்ணு லட்சுமி சிலைக்கு பதிலாக,கரிராமன் என்று தவறான சிலையை(ராமன் சிலையை) வைத்து வழிபடுகின்றனர்.
         ஆனால் இன்றும் மலையாளக் கவுண்டர் இனத்தின் ஆதிக்குடியேற்றத்தின் போது ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் ஆதிக்கோவில் கருமந்துறையில் அமைந்துள்ளது.அங்கு கரிராமன் என்ற கரிவரதன் தானும் தன் இரு மனைவியருடன் அமர்ந்தநிலையில் காட்சித் தருகிறார்.
             மலையாள கவுண்டர்களைப்போல் சேலம் பகுதியில் வாழும் நாட்டுக்கவுண்டர்கள் கரிவரதனை கரிய மாணிக்கப்பெருமாள் என்ற பெயரிலும்,ஆத்தூரில் வாழும் வேளாளர்கள் ஆத்தூர் கரிவரதராச பெருமாளையும் குலசாமியாக வழிபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.