வியாழன், 26 மார்ச், 2026

ஆவணத்தில் காராள முதலி( மலையாளி) வரலாறு.

ஆவணத்தில் காராள முதலி(மலையாளி) வரலாறு:

1930 ஆம் நம் காராள முதலியார்(மலையாளி) இனத்தின் மகா சபை கூட்டத்தில்,நம் இனத்தின் ராஜா மற்றும் குரு,குலசேகரன் பட்டம் கொண்ட தேனாண்டை குல லட்சுமண குரு கூறிய நம் வரலாறு பின்வருமாறு:


ஸ்ரீராமஜெயம்.

(திருவுருவப் படம்: விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி)

காராள வம்சம் (விஷ்ணுகோத்திரம்) ஆதிமுதலில் முதலி(முதலியார்) வம்ச மலையாளி ஜாதியின் லோககுரு பரம்பரையாகிய சேலம் ஜில்லா அரூர்தாலுக்கா குரு க்ஷேத்திரம் சித்தேரிமலை கலசபாடியில் வாசஞ்செய்யும் தொம்பகல் தேனாண்டை
லக்ஷ்மணகுரு தனக்கு சம்மந்தப்பட்ட தமிழ் பேசும் மலையாளி ஜாதியின் சிஷ்யர்களுக்கு சீர்திருத்தம் செய்யும்பொருட்டு தானும் (தனக்கு சம்மந்தப்பட்ட நாட்டில் முக்கியமாய் நாகரீகம் அடைந்த சிஷ்யர்களும்) ஆமோதித்து கொண்டு வந்த விவாக விஷயமாக சீர்திருத்த மசோதா.

(1930-ம் வருடத்தில் பிரசுரம் செய்யப்பட்டது.)


தமிழ் பேசும் ஒவ்வொரு மலையாளிகளும் கீழ்கண்ட உண்மை
ஜாதியை முற்காலத்தில் இருந்ததை கவனித்து நமது மலையாள ஜாதிக்கு
நன்மதிப்பை கொண்டுவரும்படி ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

நாம் மலைமேல் வாசம் செய்துவந்ததால் நமக்கு மலையாளிகள் என்று நாமதேயமாயிற்று சில நூற்றாண்டுகளுக்குமுன், நம்முடைய ஜாதி ஆகப்பட்டது செங்கல்பட்டு ஜில்லா காஞ்சீபுரம் தாலுக்காவில் இருந்தது.
(வேளாண்மை தொழில் செய்துவந்த காராள முதலி வம்சத்தை ஒட்டின பரம்பரை) பிறகு தற்காலத்தில் ஸ்ரீ கரிராமர் என்று அழைக்கும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கரிவரதரின் நாமதேயத்தை நம்முடைய ஜாதிகளுக்கு புகட்டிக்கொண்டு,சோழ ராஜா காலத்தில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு மலைமலையாக தங்கி மேற்படி கால்நடைகளுக்கு சௌகரியத்தின்பொருட்டு மலைமேல் தங்கி விட்டபடியால் நமக்கு மத்தியில் மலையாள ஜாதியென்று அடி நாட்டார்கள் நம்மை கூப்பிடலாயிற்று.

சாஸ்திராப்படி தமிழ் பேசும் மலையாளி(கேரள மக்கள்) ஜாதி அல்ல.மலையாளிகளுக்கு அவர்கள் ஜில்லாவும் வேறு அவர்கள் பாஷையும்
மலையாளம், அவர்கள் பேச்சும் மலையாளம், அவர்கள் பழக்கமும் நடையுடை பாவனையும் வேறு.

நம் ஜாதியார் முதலிமார்,முதலிமார் என்றால் தப்பு அர்த்தம் கொள்ளக் கூடாது. அதாவது நாம் செங்குந்த முதலி வம்சத்தை சேர்ந்தவர்கள் அல்ல. 

சோழ ராஜகாலத்தில், பயிர் தொழிலும், கால் நடை மேய்ச்சலும் செய்துவந்ததால் நம்மை கார் ஆளர்(காராளர்) என்று கூப்பிடலாயிற்று.
நமக்கு பிறகு அடி நாட்டார்கள் நம்மை கவுண்டர்கள் என்று கூப்பிடலாயிற்று. 

கவுண்டர் என்றால்,கொங்கு வேளாளருக்கும், வன்னிய குலத்தாருக்கும் கவுண்டர் என்று நாமதேயமுண்டு, அவர்களை ஒட்டின ஜாதியல்ல, நாம் கிழக்கே அதாவது சமுத்திர கரையை ஒட்டி வந்த காராள முதலி வம்சமென்று அறியவும்.நம்முடைய ஜாதியை ஒட்டினவர்களே ஜவ்வாது மலைமேல் வாசஞ் செய்பவர்களும், கொல்லிமலை,பச்சைமலை,மற்றுமுள்ள மலைபேரில்(சேர்வராயன் மலை,ஏலகிரி மலை,வத்தல் மலை,கல்வராயன் மலை மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள காளி மலை,கடம்பூர் மலை,பால மலை) வாசஞ்செய்யும் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் நம் இனத்தார்களே. 

அந்த அந்த மலைபேரில் வாசம்
செய்துவந்ததால் மலையின் பேர் மேற்படியார்களுக்கு வழங்கலாயிற்று.
சாஸ்திரபடி மலைமேல் வாசஞ்செய்யும் ஒவ்வொரு மலையாளர் தமிழ்பேசு
பவரெல்லாம் நம் இனத்தார்களே என்று அறியவும். அந்த மலையின்
மேல் வசிப்பவர்களை அந்த அந்த அடிநாட்டார் வழக்கத்தை மத்தியில்
கையாடிவிட்டுவந்து இருக்கிறார்கள்.

முன் ஒரு காலத்தில் நமது ஜனங்கள் கடவுள் வணக்கமே இல்லா
மலும், மூட்டுதனமாயும், மிலேச்சாயும், நமது மதத்தைதொழுவாமல்
அன்னிய மதத்தை தொழுதுகொண்டுமிருந்தவர்களை நல்வழிக்கு
கொண்டுவரும்பொருட்டும் கடவுள் வணக்கம் விக்கிரக ஆராதனை செய்
யும்பொருட்டும் காஞ்சீபுரத்திலிருந்து நமது காராள குலசிகாமணி
களாகிய 10-க்கு மேற்பட்ட முதலிமார்மார்கள், கிழக்கே இருந்து வந்து அநேக ஆறுகள், மலைகள் கடந்துவந்து ஸ்ரீ கரிராமர் என்னும், காஞ்சி ஸ்ரீ கரிவரதரின் மகிமையும் ஷை சுவாமியின் அடையாளமாகிய குடையும், வெஞ்சாமரையும், சுவாமியின் கொடியையும், இன்னும் அநேக அடையாளங்கள் கொண்டுவந்து அங்காங்கே கோயில்களை உற்பத்தி செய்து, நமது ஜாதிக்கு ஆதி குருபீடமாகிய கலசபாடியில் தேனாண்டை வம்சத்தை(குலத்தை) ஷை சுவாமி காரியத்திற்காக குருகாணிக்கை நமது குலதார்களிடம் வசூல்செய்யவும் மேலும் நமது குலத்திற்கு பெரிய பீட
மாகவும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தற்காலத்தில் இதை சிலர் அடியோடு மறந்துவிட்டு குரு வணக்கத்தையும், குருவுக்கு முற்காலத்தில் ஏற்பட்ட குரு காணிக்கையும் மறந்து விட்டு வருகிறார்கள். அம்மாதிரி நடவாமல் நமது ஜாதிக்கு நற்பெயரும் நல்ல மதிப்பும் இனிகொண்டுவரும்படி இதன்மூலியமாய் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இனிமேற்கொண்டு நமது ஜாதியைப்பற்றிய சீர்திருத்தம், நம் விஷயத்தைப்பற்றியும் அபிவிர்த்தியைப்பற்றியும், கடவுளின் வணக்கத்தைப்பற்றியும், ஆலய வழிபாடுபற்றியும், குருவின் காணிக்கையைப்பற்றியும், பெரியோர்களின் வணக்கத்தைப்பற்றியும் அடிக்கடி பிரசுரம் மூலியமாய் வெளிவரும்.

மேல்கண்ட சீர்திருத்தம் (தமிழ் பேசும் மலையாள தேசமாகிய,
சித்தேரி மலைநாடு, அரியகவுண்டன் மலைநாடு, குறும்பகவுண்டன் மலை
நாடு, அன்னதான ஜடயகவுண்டன் மலைநாடு, பெரிய கல்ராயன் மலைநாடு,சின்னகல்ராயன் மலைநாடு, சேர்வராயன் மலைநாடு, வத்தல மலைநாடு,கொல்லி மலைநாடு, பச்சைமலைநாடு பால மலைநாடு, காளிமலைநாடு, ஜவ்வாது மலைநாடு, ஏலகிரி மலைநாடு, பர்கூர் மலைநாடு,மைசூர் சமஸ்தானத்திலும்,
கோயம்பத்தூர்(இன்று ஈரோடு) ஜில்லா பூனாச்சிமலையில் வாசஞ்செய்யும் காராள வம்ச தமிழ் பேசும் மலையாளருக்கும் மேல்கண்ட தீர்மானம் செலாவணி
ஆகும்.

தமிழ் பேசும் மலையாள ஜாதியின் பிறப்பு வளத்தைப்பற்றியும் ஜாதி உற்பத்தியைப்பற்றியும் இதற்கு குருவின் சரித்திரத்தைப்பற்றியும், நம்குல தெய்வமாகிய கரிராமர் என்று அழைக்கும் ஸ்ரீ காஞ்சி கரிவரதராஜ
பெருமாளின் மகிமையைப்பற்றியும் சாஸ்திரபடி உண்மையான சரித்திரம்
ஒவ்வொரு நம்முடைய ஜாதியாருக்கு குருவால் பின்னால் பிரசுரிக்கப்
படும்.

இப்படிக்கு ஆசிர்வாதம்.
இப்படிக்கு தமிழ் பேசும் மலையாள ஜாதியின் லோககுருவாகிய
குலசேகரன் என்ற பட்டமும் தேனாண்டை என்ற பட்டமும்பெற்ற,
தொம்பகல். லக்ஷ்மணதுரை.
என் சீலும் முத்திரையும் போடப்பட்டது.

(***குலசேகரன் என்னும் பட்டம் பாண்டிய மன்னர்களுக்கு உரிய பட்ட பெயர் ஆகும்.***)

இதில் நமது மலையாள லோக குரு
தீர்மானத்தை நாங்கள் ஸ்ரீ கரிராமன்
எழுத்தும் கைநாட்டும் போட்டு சம்மதித்து
நடக்குபோம்,ஒவ்வொரு மலையாள ஜாதியும்.மீறினால்
காராம் பசுவை கழுத்தை அறுத்த தோஷம் அடைவோம்.
"இது சத்தி"(சத்தியம்).

இப்படிக்கு,
கையொப்பங்கள்:--
1. சித்தேரிமலை குருவின் மந்திரி [கையொப்பம்]
2. ஷையார் காணிமகன் [கையொப்பம்]
3. S. R. சங்கரதுரை பாளையகாரர்
4. [பெயர் தெளிவில்லை]
5. ராமநாட்டார், நாட்டாண்மைக்காரர்
6. வெள்ளையகவுண்டர்,(ஊர் பெயர்)
7. தீர்த்தகிரி நாட்டார், தாதம்பட்டி
8. மோளைய நாட்டார், மானேஜர்(நிறுவனம் பெயர் தெரியவில்லை) தாதம்பட்டி
9. ஷை நாட்டு காணிமகன் ஜடையகவுண்டர்
10. தீர்த்தகிரி நாட்டார், சூரியகடை
11. ஷை நாட்டு காணிமகன் சி.மு. [பெயர்]
12. அ. அருணகிரி கவுண்டர், சிட்டிலிங்கி
13. வேங்கை நாட்டார், நாட்டாண்மை
14. தீர்த்தா நாட்டார், சூரியகடை
15. ஜாகீர் வெள்ளி நாட்டார்
16. தீத்தா நாட்டான், [பெயர்]
17. கல்லிராய(கல்வராயன்) கவுண்டர், நாட்டாண்மை
18. கரியா நாட்டான்
19. ஜடைய நாட்டான்
20. ராமகவுண்டர், தேக்கல்பட்டி
21. அண்ணாமலை கவுண்டர், அரசநத்தம்
22. வெங்கடாஜலகவுண்டர், கலசபாடி
23. லட்சுமணகவுண்டர், கலசபாடி

காராள முதலியார்( மலையாளி) சமூக ஆவணம்.

காராள ( மலையாளி) வம்சத்தின் திருமண சீர்திருத்த மசோதா

இந்த ஆவணம் 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு வரலாற்றுச் சமூக ஆவணமாகத் தெரிகிறது. இதில் உள்ள வாசகங்களை வரி மாறாமல் கீழே வழங்குகிறேன்:

ஆவணத்தில் உள்ள தமிழ் வரிகள்:

ஸ்ரீராமஜெயம்.

(திருவுருவப் படம்: விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி)
காராள வம்சம் (விஷ்ணுகோத்திரம்) ஆதிமுதலில் முதலி வம்ச மலையாளி ஜாதியின் லோககுரு பரம்பரையாகிய சேலம் ஜில்லா அரூர் தாலுக்கா குரு க்ஷேத்திரம் சித்தேரிமலை கலசபாடியில் வாசஞ்செய்யும் தொம்பகல் தேனாண்டை
லக்ஷ்மணகுரு தனக்கு சம்மந்தப்பட்ட தமிழ்
பேசும் மலையாளி ஜாதியின் சிஷ்யர்களுக்கு சீர்திருத்தம் செய்யும்பொருட்டு தானும் (தனக்கு
சம்மந்தப்பட்ட நாட்டில் முக்கியமாய் நாகரீகம் அடைந்த சிஷ்யர்களும்) ஆமோதித்து கொண்டு வந்த விவாக விஷயமாக சீர்திருத்த மசோதா.

(1930-ம் வருடத்தில் பிரசுரம் செய்யப்பட்டது.)

விளக்கம்:

இந்த ஆவணம் 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு "திருமணச் சீர்திருத்த மசோதா" ஆகும். இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. சமூகப் பின்னணி: இது 'காராள வம்சம்' (விஷ்ணு கோத்திரம்) மற்றும் தமிழ் பேசும் 'மலையாளி' (மலைவாழ் மக்கள் பிரிவைச் சார்ந்தவர்கள்) சமூகத்தைச் சார்ந்தது.

2. தலைமை: சேலம் மாவட்டம், அரூர் தாலுக்காவில் உள்ள சித்தேரிமலை, கலசப்பாடி பகுதியில் வசிக்ககும் தொம்பகல் தேனாண்டை லக்ஷ்மண குரு என்பவரால் இது முன்மொழியப்பட்டுள்ளது. இவர் அந்த சமூகத்தின் 'லோக குரு' பரம்பரையைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. நோக்கம்: அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் நாகரீகம் அடைந்த சிஷ்யர்களுடன் இணைந்து, திருமணச் சடங்குகளில் (விவாக விஷயம்) சில சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

4. காலம்: இது பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் (1930) சமூக மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான வரலாற்றுப் பதிவாகும்.

இரண்டாவது பக்கத்தில் உள்ள வரிகளை வரி மாறாமல் கீழே வழங்குகிறேன்:

ஆவணத்தில் உள்ள தமிழ் வரிகள்:

பஞ்சாயத்தார்கள் தீர்மானபடி தாலிகட்டின புருஷனுக்கு கல்யாண தொகை வசூல் செய்துகொடுப்பதற்கு சுதந்திரம் உண்டு.

இதில் முதலில் தாலிகட்டின புருஷனுக்கு பிறந்த குழந்தைகள்,தாலிகட்டினவன் இடம் சேருவதற்கும், அவனுடைய சொத்தை மேற்
படி குழந்தைகள் அனுபவிப்பதற்கும் சுதந்திரமுண்டு.

தாலிகட்டின புருஷனைவிட்டு அன்னிய புருஷன் இடம்போய் பிறக்கும் குழந்தைகள் பஞ்சாயத்தார் தீர்மானம் ஆனவுடன் மேற்படி குழந்தைகள் அன்னிய புருஷனுக்கே அனுபவிப்பதற்கு சுதந்திரமுண்டு.

பழயஜாதி வழக்கப்படி உள்ள கெட்ட பழக்கத்தை இதில் ரத்து செய்யப்
பட்டுள்ளது.சில சந்தர்ப்பங்களில் பெரிய குடும்பத்திலோ அல்லது ஏழை குடும்
பத்திலோ கல்யாணமான ஒரு பெண்ணை அன்னிய புருஷன் (அதாவதுதன் செல்வத்தின் மதிப்பினாலும் அல்லது தன் அலங்காரத்தினாலும் துராகிரதமாய் ஒரு பெண்ணை தன் சொந்த புருஷன் இடம் வாழ்பவளை கெடுத்து தான் சுதந்திரம் செய்யும் கேஸ்களுக்கு,மேற்படியான் இடம் முதல் தாலிகட்டின புருஷனுக்கு பூரா
கல்யாண தொகை வசூல் செய்வதுமன்றி,

தான் அக்கிரமமாய் மேற்படி வாழும் பெண்ணை கலைத்து கெடுத்த விபரம் பஞ்சாயத்தார்கள் விசாரணை காலங்களில்
குற்றம் ருசுவானால், மேற்படி குற்றத்திற்கும் அன்னிய புருஷன் பிரத்தியேகமாக ஜாதிக்குற்ற தொகை பஞ்சாயத்தார்கள் தீர்மானப்படி, கொடுக்க கடமைப்பட்டிருக்கிறான்.

3. ஒரு கல்யாணமான பெண், அன்னிய புருஷன் இடம் சேர்ந்துபிறகு பஞ்சாயத்தார்கள் மேற்படி வழக்கை விசாரிக்கும் தருணத்தில் மேற்படி பெண் ஆனவள் கட்டின புருஷன் இடமே நான் சேர்ந்துகொள்ளுகிறேன், என்றாலும் மேற்படி பெண்ணை மறுபடியும் சேர்த்து
கொள்ள முதலில் தாலிகட்டின புருஷன் இஷ்டப்பட்டாலொழிய, பழயஜாதி வழக்கப்படி மேற்படி பெண்ணை பலவந்தமாய் புருஷன் இடம் சேர்க்க பஞ்சாயத்தார்களுக்கு அதிகாரமில்லை.

5. பழய ஜாதி வழக்கப்படி ஒரு சம்மதம் இல்லாத பெண்ணை திடீரென்று புருஷனுக்கு கல்யாணம் செய்தாலும், ருதுவாகாத இளம்பெண்ணை கல்யாணம் செய்தாலும், இளங்குழந்தைகளை துராகிரதமாய் தூக்கிச்சென்று தாலிகட்டினாலும்,மேற்படி புருஷன் ஆனவன் சென்னை அரசாங்க விவாக சட்டப்படி குற்றவாளி ஆவதுமன்றி ஜாதிவழக்கப்படி பஞ்சாயத்தார்கள் தீர்மான குற்றத்திற்கும் கடமை பட்டிருக்கிறான்.

விளக்கம்:

இந்த இரண்டாம் பக்கம் அந்தச் சமூகத்தில் நிலவி வந்த சில சிக்கலான குடும்ப நடைமுறைகளைச் சீர்திருத்த முயல்கிறது. இதன் முக்கியக் கருத்துக்கள்:

குழந்தைகளின் உரிமை: முதல் கணவனுக்குப் பிறந்த குழந்தைகள் அவனது சொத்தில் உரிமை பெறலாம். பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வாழும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தத் தந்தைக்கே (அன்னிய புருஷன்) உரியவர்கள். இதன் மூலம் பழைய சில குழப்பமான வழக்கங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

விவாகரத்து மற்றும் இழப்பீடு: ஒரு பெண்ணை அவளது கணவனிடமிருந்து பிரித்துச் செல்லும் நபர், பெண்ணின் முதல் கணவனுக்குத் திருமணச் செலவுகளைத் திருப்பித் தர வேண்டும். மேலும், அத்துமீறல் நிரூபிக்கப்பட்டால் சமூகப் பஞ்சாயத்திற்கு அபராதமும் (ஜாதிக்குற்ற தொகை) செலுத்த வேண்டும்.

பெண்ணின் விருப்பம்: கணவனைப் பிரிந்த பெண் மீண்டும் அவனிடமே சேர விரும்பினாலும், கணவன் சம்மதித்தால் மட்டுமே அது நடக்கும். பெண்ணைப் பலவந்தமாக எங்கும் அனுப்ப பஞ்சாயத்துக்கு அதிகாரம் இல்லை எனப் பெண்ணின் உரிமையைப் பேசுகிறது.

குழந்தை திருமணத் தடை: 4-வது விதியில் மிக முக்கியமாக, மைனர் திருமணங்கள் (ருதுவாகாத பெண்) மற்றும் பெண்ணின் சம்மதம் இல்லாத திருமணங்கள் சட்டப்படி குற்றம் என்றும், அத்தகையச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சென்னை அரசாங்கச் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் என்றும் எச்சரிக்கிறது.

1930-களில் சமூகத்தில் நிலவிய ஆணாதிக்கப் போக்குகள் மற்றும் முறையற்ற திருமணச் சடங்குகளை மாற்றி, ஒரு சட்டப்பூர்வமான ஒழுங்கைக் கொண்டுவர இந்த மசோதா முயன்றிருக்கிறது.

இந்த மூன்றாவது ஆவணப் பக்கத்தில் உள்ள வரிகளை வரி மாறாமல் கீழே வழங்குகிறேன். இதில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதற்கான காலமும், சமூகப் பின்னணியும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆவணத்தில் உள்ள தமிழ் வரிகள்:
ஸ்ரீராமஜெயம்.

காஞ்சீ குலதெய்வமாகிய ஸ்ரீகரிவரதசுவாமி துணை.

(திருவுருவப் படம்: விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி)

1930-ம் வருடம் மே மாதம் 1-ம் தேதி இதற்கு தமிழ் வருடம் கலியுகாதி 5032-ம் வருடம் பிரமோதூத வருஷம் சித்திரை மாதம் 19-ம் தேதி தீர்மானித்த விபரம்.

காராள வம்சம் (விஷ்ணு கோத்திரம்) ஆதியில் முதலி வம்சம் மலையாள ஜாதியின் லோக குரு பரம்பரையாகிய சேலம் ஜில்லா அரூர் தாலுக்கா குருக்ஷேத்திரம் சித்தேரி கலசபாடியில் வாசஞ்செய்யும் தொம்பகல் தேனாண்டை லக்ஷ்மணகுருவின் குமாரராகிய தொம்பகல் தேனாண்டை லக்ஷ்மணகுரு தனக்கு சமமந்தப்பட்ட ஜாதியின் சிஷ்யர்
களுக்கு சீர்திருத்தம் செய்யும்பொருட்டு செய்த தீர்மானத்தின் விபரம்.

காராள ஜாதியின் விவாக விஷயத்தைப்பற்றிய தீர்மானம்.

1. காராள ஜாதியில் பிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனக்கு விவாகம் ஆனவுடன், சில சந்தர்ப்பங்களில் ஆண்கள், தன்னுடைய பெண் ஜாதியை விட்டு பிரிந்து யாதொரு காரணம் இல்லாமல் இதர பெண்டுகளை கையாண்டு கொண்டு,தான் கட்டின சம்சாரத்தை கைசோரவிட்டு
விடுகிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில் கல்யாணமான பெண் தன்னுடைய புருஷன் இடம் வாழாமல் புருஷனை கைசோரவிட்டு அன்னிய புருஷனை, உறவு பற்றிக்கொள்ளுகிறார்கள். இதனால் தாலிகட்டின புருஷனுக்கு வீணான
கல்யாண செலவு கடன் ஏற்பட்டு நஷ்டாளியாக போவதை கண்கூடாய்
பார்க்கிறோம்.

ஒரு பெண் ஆனவள் புருஷன் இடம் சில நாள் அல்லது மாதம் அல்லது வருடம் இருந்து, புருஷனிடம், சுகதுக்கம் அனுபவித்து தாலிகட்டின புருஷனுக்கு, குழந்தைகள் பெற்று, அன்னிய புருஷனை
தேடிக்கொண்டு அன்னிய புருஷன் இடம் வாசம் செய்துவந்தால் மேற்படி பெண்ணும், மேற்படி பெண்ணை வைத்து சம்ரட்சனை செய்பவனும்

விளக்கம்:

இந்தத் தாள் மசோதாவின் முதல் பக்கத்தின் விரிவான பதிவாகவும், விதிமுறைகளின் தொடக்கமாகவும் அமைகிறது.

துல்லியமான காலம்: 1930 மே 1-ம் தேதி (தமிழ் வருடம்: பிரமோதூத, சித்திரை 19). இது சுமார் 96 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணம்.

சமூகத் தலைமை: சேலம் மாவட்டம்(இன்று தருமபுரி மாவட்டம்) சித்தேரி மலைப்பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மண குருவின் மகன் லக்ஷ்மண குரு, இந்தத் தீர்மானங்களை முன்னெடுத்துள்ளார்.

முக்கியப் பிரச்சனை: அந்தச் சமூகத்தில் நிலவிய திருமண முறிவுகள் மற்றும் முறையற்ற உறவுகள் குறித்து இந்த மசோதா கவலை தெரிவிக்கிறது. 

o ஆண்கள்: காரணமே இல்லாமல் மனைவியைக் கைவிட்டுவிட்டு வேறு பெண்களுடன் தொடர்பு கொள்வது.

o பெண்கள்: கணவனைப் பிரிந்து வேறு நபர்களுடன் சென்றுவிடுவது.

பொருளாதாரப் பாதிப்பு: இத்தகையச் செயல்களால் திருமணத்திற்காகச் செலவு செய்த கணவன்மார்கள் கடனாளியாகவும், நஷ்டமடைந்தவர்களாகவும் மாறுவதைத் தடுக்கவே இந்தச் சட்டங்கள் (பஞ்சாயத்து விதிகள்) உருவாக்கப்பட்டன.

இந்த ஆவணம் அந்த காலக்கட்டத்திலேயே சமூக ஒழுக்கத்தையும், குடும்ப அமைப்பின் பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்ய முயன்றதைக் காட்டுகிறது.

இந்த நான்காவது ஆவணப் பக்கத்தில் உள்ள வரிகளை வரி மாறாமல் கீழே வழங்குகிறேன். இந்தப் பக்கம் விவாக நடைமுறைகள் மற்றும் அபராதத் தொகை குறித்த நுணுக்கமான விதிகளைக் கொண்டுள்ளது.

ஆவணத்தில் உள்ள தமிழ் வரிகள்:
இதனால் விவாகம் என்றால் பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும்,ஜாதி சடங்குகள்படி சம்மதித்து பிறகு ஜாதி வழக்கப்படி குருவின் இடம் சென்றாவது, தாலி வாங்கிக்கொண்டோ, அல்லது குருவால் அங்கீகாரம் செய்யப்பட்ட நாட்டாண்மைக்காரரால் தாலி வாங்கிக்
கொண்டு ஜாதி வழக்கப்படி கல்யாணம் நடத்தவேண்டியது.

தவறும் கேஸ்களுக்கு பஞ்சாயத்தார்கள் தீர்மானப்படி பெண்வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் ஜாதி வழக்கப்படி குற்றத்திற்கு ஜவாப்தாரிஆககடவது.கல்யாண தொகை பூராவும் வாங்கும் கேஸ்கள் அடியில் கண்டவை.

5. ஒரு கல்யாணமான பெண் புருஷனிடம் யாதொரு சுக துக்கம் அனுபவிக்காமல் இருந்தாலும் அப்பேர்க்கொத்த பெண்ணை அன்னிய புருஷன் இச்சித்தவரிடமும்.
ஒரு பெண் ஆனவள் புருஷன் இடம் வாழாமல் தாய் தகப்பனார் சம்ராட்சணையில் இருப்பவள் பெண்ணின் தாய் தகப்பனார் புத்திமதி
சொல்லி தன்பெண்ணை புருஷன் வீட்டுக்கு அனுப்பாமல் மேற்படி பெண்ணை தாய் தகப்பனார் உடந்தையின்பேரில் தாய் வீட்டிலேயே அன்னிய புருஷனை சேர்த்ததாக பஞ்சாயத்தார்கள் விசாரணை காலங்களில் ருசுவானால் கேஸ்களுக்கு தாலிகட்டின புருஷனுக்கு கல்யாண தொகை வாங்கி கொடுப்பதற்கு சுதந்திரம் உண்டு.கல்யாண தொகை பேர்பாதி வாங்கும் கேஸ்கள் அடியில் கண்டவை.

6. ஒரு பெண் ஆனவள் முதலில் தாலிகட்டின புருஷன் இடம் பேர்பாதி வயது கழித்திருந்தாலும், அல்லது முதல் புருஷனுக்கு சில குழந்தைகள் பிறந்து (முதலில் தாலிகட்டின புருஷனால் மேற்படி பெண்ணுக்கு வீணான இம்சை ஏற்பட்டு மேற்படி பெண் ஆனவள் அன்னிய புருஷனை கைப்பற்றும் கேஸ்களுக்கு பஞ்சாயத்தார் தீர்மானத்தில் விஷயம் ருசுவானால் அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் மேற்படி பெண்ணை வைத்து சம்ராட்சணை செய்யும் புருஷன் இடமாவது அல்லது பெண்ணின் இடமாவது கல்யாண தொகையில் பேர்பாதி முதலில் தாலிகட்டின
புருஷனுக்கு பஞ்சாயத்தார்கள் தீர்மானப்படி கொடுப்பதற்கு சுதந்திரம்
உண்டு.

ஜீவனாம்சம் தாலிகட்டின புருஷனிடம் பஞ்சாயத்தார்கள்
தீர்மானிக்கவேண்டிய கேஸ்கள் அடியில் கண்டவை.

7. ஒரு தாலிகட்டின பெண்ணை புருஷனானவன் வேணுமென்று
அவளை வைத்துவாழாமல் புறக்கணித்துவிட்டு மேற்படி பெண்ணானவள்
அன்னிய புருஷன் இடம் வாழ்வதற்கு தக்க வயது இல்லாமல் இருந்தா

விளக்கம்:
இந்த நான்காவது பக்கம் சமூகத்தின் ஒழுங்குமுறை மற்றும் நிதி சார்ந்த இழப்பீடுகளை மிகத் தெளிவாக வரையறுக்கிறது:

1. முறைப்படியான திருமணம்: குருவிடமோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டாண்மையிடமோ தாலி பெற்று, ஜாதிச் சடங்குகளின்படி நடப்பதே அங்கீகரிக்கப்பட்ட திருமணமாகும். இதில் தவறு நேர்ந்தால் இரு வீட்டாரும் பஞ்சாயத்திற்குப் பதில் சொல்ல வேண்டும்.

2. முழு இழப்பீடு (Case 5): ஒரு பெண் தன் கணவனுடன் வாழாமல் இருக்கும்போது, அவளுடைய பெற்றோரே உடந்தையாக இருந்து அவளை வேறு ஒருவருடன் சேர்த்து வைத்தால், முதல் கணவனுக்குத் திருமணச் செலவு முழுவதையும் (கல்யாண தொகை) அந்தப் பெற்றோரோ அல்லது அன்னிய புருஷனோ திருப்பித் தர வேண்டும்.


3. பாதி இழப்பீடு (Case 6): ஒரு பெண் தன் முதல் கணவனுடன் நீண்ட காலம் வாழ்ந்து, குழந்தைகளும் பெற்ற பிறகு, முதல் கணவன் கொடுக்கும் இம்சையாலோ அல்லது வேறு காரணத்தாலோ பிரிந்து சென்றால், அத்தகைய சூழலில் பாதித் திருமணச் செலவை (பேர்பாதி) மட்டும் திருப்பித் தந்தால் போதும் என மனிதாபிமான அடிப்படையில் சலுகை அளிக்கிறது.

4. ஜீவனாம்சம் (Case 7): கணவனே மனைவியை வேண்டுமென்று புறக்கணித்துத் துரத்திவிட்டால், அந்தப் பெண்ணுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை (ஜீவனாம்சம்) பெற்றுத் தர பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு எனத் தொடங்குகிறது 
இந்த விதிகள் 1930-களில் குடும்பச் சிதைவுகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருவிதமான சமூக நீதியைப் பெற்றுத் தரவும் உருவாக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

இந்த ஐந்தாவது ஆவணப் பக்கத்தில் உள்ள வரிகளை வரி மாறாமல் கீழே வழங்குகிறேன். இந்தப் பக்கம் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அந்தச் சமூகத்தின் பூர்வீகம் குறித்த மிக முக்கியமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது.

ஆவணத்தில் உள்ள தமிழ் வரிகள்:
லும், அல்லது தனியாக இருந்தாலும், அப்பேர்ப்பட்ட கேஸ்களுக்கு ஜாதி வழக்கப்படியும், பஞ்சாயத்தார்கள் தீர்மானப்படியும், மேற்படி பெண்ணுக்கு ஆயுள்கால பரியந்தம் அதாவது அவள் அன்னிய புருஷனை கைப்பற்றாமல் இருக்கும்வரையில் தாலிகட்டின புருஷன்
அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறான்.

இதில் ஒரு பெண் கல்யாணமானவுடன் கடவுள் சந்தர்ப்பத்தினால்,கூன், குருடு, மொண்டி, மொடம், பெருவியாதி, அஞ்ஞானம் முதலியவைகள் நேரிட்டால் மேற்படி பெண்ணைவைத்து தாலிகட்டின புருஷன் சம்ராட்சணை செய்யாத கேஸ்களுக்கு மேற்படி பெண்ணுக்கு ஆயுள்கால பரியந்தம் ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறான்.

தற்காலத்தில் நாகரீகம் வளரும் காலத்தில் நமது மலையாள ஜனங்களுக்கு கீழ்ப்பட்ட ஜாதிகள் நமக்கு மேலான குலம் மாதிரியாக அபிவிர்த்தி அடைவதை முன்னிட்டு, நம்முடைய முன்னோர்கள் எல்லாம்
ஆதிகாலத்தில் கடவுள் வணக்கமுள்ளவர்களாயும் தெய்வ பக்தி, குரு பக்தி, பெரியோர் வணக்கமுள்ளவர்களாயும், சத்தியம் தவறாமல், பிறர் மனைவிகளை இச்சிக்காமலும், பொய் சொல்லாமலும், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, காராள தொழிலை காலத்தில் செய்து, பசு கால்நடைகளை போஷித்து காலங்கழித்து நமது மலையாள ஜாதியை அபிவிர்த்தி செய்துவந்தார்கள்.

 தற்காலத்தில் பிறர் மனைவிகளை காதலித்து, தாலிகட்டின புருஷனுக்கு வீணான நஷ்டத்தை உண்டு பண்ணுவதாலும், விபசாரம்,
துர்ப்பழக்கத்தை அடியோடு நிறுத்துவதற்காகவும், நாடுகளில் நம்
முடைய மூதாதி காலத்தில் பழகிவந்த கல்யாண முதலிய சுபசடங்குகளை தக்க காலத்திலும், தக்க வயதிலும், செய்யும்பொருட்டு மேல் கண்ட தீர்மானங்களை (நமது குலத்தில் பிறந்த தமிழ் பேசும் ஒவ்வொரு மலையாள ஜாதிக்கும் இந்த விவாக சட்டமானது அமுலில் இருக்கும்படியாக தீர்மானித்துள்ளோம்.

9. தமிழ் பேசும் ஒவ்வொரு மலையாளிகளும் கீழ்கண்ட உண்மை
ஜாதியை முற்காலத்தில் இருந்ததை கவனித்து நமது மலையாள ஜாதிக்கு
நன்மதிப்பை கொண்டுவரும்படி ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்ளு
கிறோம்.

நாம் மலைமேல் வாசம் செய்துவந்ததால் நமக்கு மலையாளிகள் என்று நாமதேயமாயிற்று சில நூற்றாண்டுகளுக்குமுன், நம்முடைய ஜாதி ஆகப்பட்டது செங்கல்பட்டு ஜில்லா காஞ்சீபுரம் தாலுக்காவில் இருந்த
(வேளாண்மை தொழில் செய்துவந்த காராள முதலி வம்சத்தை ஒட்டின பரம்பரை) பிறகு தற்காலத்தில் ஸ்ரீ கரிராமர் என்று அழைக்கும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கரிவரதரின் நாமதேயத்தை நம்முடைய ஜாதிகளுக்கு புகட்டிக்கொண்டு, சோள ராஜா காலத்தில் கால்(நடைகளை)

விளக்கம்:

இந்தப் பக்கம் மிக முக்கியமான மூன்று செய்திகளைக் கூறுகிறது:

1. பெண்களுக்கான வாழ்வாதாரப் பாதுகாப்பு: 

o ஒரு கணவன் மனைவியைப் பிரிந்தால், அந்தப் பெண் மறுமணம் செய்யாதவரை அவளுக்கு ஆயுள் முழுவதும் கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும்.

o திருமணத்திற்குப் பிறகு பெண்ணுக்கு உடல் ஊனம் (கூன், குருடு போன்றவை) அல்லது தீராத நோய் ஏற்பட்டால், கணவன் அவளைப் பராமரிக்க மறுக்கக் கூடாது. அப்படிப் பராமரிக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் தர வேண்டும். இது 1930-லேயே பெண்ணுரிமை மற்றும் மனிதாபிமானத்தைப் போற்றும் சட்டமாக இருந்துள்ளது.

2. சமூக ஒழுக்கம் மற்றும் சீர்திருத்தம்: 
o பிற ஜாதிகள் முன்னேறுவதைச் சுட்டிக்காட்டி, தங்கள் சமூகமும் முன்னேற வேண்டும் என ஊக்குவிக்கிறது.
o திருமண வயதை முறைப்படுத்துவது, பிறர் மனைவியை இச்சிக்காமல் இருப்பது போன்ற நற்பண்புகளை மீட்டெடுக்க இந்த "விவாகச் சட்டம்" இயற்றப்பட்டதாகக் கூறுகிறது.

3. பூர்வீக வரலாறு (மிக முக்கியமானது): 
o இவர்கள் தங்களை காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த காராள முதலி வம்சத்தின் வழிவந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.
o மலையில் குடியேறியதால் 'மலையாளிகள்' (இன்று கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள காளி மலை,பால மலை,கடம்பூர் மலைப்பகுதிகளில் வாழும் 'மலையாளி’ மக்கள்) என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

o இவர்களது குலதெய்வம் காஞ்சிபுரம் ஸ்ரீ கரிவரதராஜ சுவாமி என்பதும், சோழர் காலத்தில் இவர்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் என்பதும் இந்தப் பக்கத்தின் மூலம் தெரியவருகிறது.

ஆவணத்தின் ஆறாவது பக்கத்தில் உள்ள வரிகளை வரி மாறாமல் கீழே வழங்குகிறேன். இந்தப் பக்கம் உங்கள் சமூகத்தின் பெயர்க்காரணம், பூர்வீகம் மற்றும் குல அடையாளங்கள் குறித்த மிக முக்கியமான வரலாற்றுத் தரவுகளைக் கொண்டுள்ளது.

ஆவணத்தில் உள்ள தமிழ் வரிகள்:
(கால்)நடைகளை மேய்த்துக்கொண்டு மலைமலையாக தங்கி மேற்படி கால்நடை
களுக்கு சௌகரியத்தின்பொருட்டு மலைமேல் தங்கி விட்டபடியால் நமக்கு மத்தியில் மலையாள ஜாதியென்று அடி நாட்டார்கள் நம்மை கூப்பிடலாயிற்று.

சாஸ்திராப்படி தமிழ் பேசும் மலையாளி ஜாதி அல்ல.மலையாளிகளுக்கு அவர்கள் ஜில்லாவும் வேறு அவர்கள் பாஷையும்
மலையாளம், அவர்கள் பேச்சும் மலையாளம், அவர்கள் பழக்கமும் நடை
யுடை பாவனையும் வேறு.நம் ஜாதியார் (முதலிமார் என்றால் தப்பு அர்த்தம் கொள்ளக்கூடாது) அதாவது நாம் செங்குந்த முதலி வம்சத்தை சேர்ந்தவர்கள் அல்ல. 

சோழ ராஜகாலத்தில், பயிர் தொழிலும், கால் நடை மேய்ச்சலும் செய்துவந்ததால் நம்மை கார் ஆளர் என்று கூப்பிடலாயிற்று.
நமக்கு பிறகு அடி நாட்டார்கள் நம்மை கவுண்டர்கள் என்று கூப்பிடலாயிற்று. 

கவுண்டர் என்றால் கொங்கு வேளாளருக்கும், வன்னிய குலத்தாருக்கும் கவுண்டர் என்று நாமதேயமுண்டு, அவர்களை ஒட்டின ஜாதியல்ல, நாம் கிழக்கே அதாவது சமுத்திர கரையை ஒட்டி வந்த(காராள முதலி வம்சமென்று அறியவும்) நம்முடைய ஜாதியை ஒட்டின
வர்களே ஜவ்வாது மலைமேல் வாசஞ் செய்பவர்களும்,கொல்லிமலை,பச்சைமலை, மற்றுமுள்ள மலைபேரில் வாசஞ்செய்யும் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் நம் இனத்தார்களே. 

அந்த அந்த மலைபேரில் வாசம்
செய்துவந்ததால் மலையின் பேர் மேற்படியார்களுக்கு வழங்கலாயிற்று.
சாஸ்திரபடி மலைமேல் வாசஞ்செய்யும் ஒவ்வொரு மலையாளர் தமிழ்பேசு
பவரெல்லாம் நம் இனத்தார்களே என்று அறியவும். அந்த மலையின் மேல் வசிப்பவர்களை அந்த அந்த அடிநாட்டார் வழக்கத்தை மத்தியில் கையாடிவிட்டுவந்து இருக்கிறார்கள்.

முன் ஒரு காலத்தில் நமது ஜனங்கள் கடவுள் வணக்கமே இல்லாமலும், மூரட்டுதனமாயும், மிலேச்சாயும்(திமிர்), நமது மதத்தைதொழுவாமல் அன்னிய மதத்தை தொழுதுகொண்டுமிருந்தவர்களை நல்வழிக்கு கொண்டுவரும்பொருட்டும் கடவுள் வணக்கம் விக்கிரக ஆராதனை செய்யும்பொருட்டும் காஞ்சீபுரத்திலிருந்து நமது காராள குலசிகாமணிகளாகிய 10-க்கு மேற்பட்ட முதலிமார்மார்கள், கிழக்கே இருந்துவந்து அநேக ஆறுகள், மலைகள் கடந்துவந்து ஸ்ரீ கரிராமர் என்னும், காஞ்சி ஸ்ரீ கரிவரதரின் மகிமையும் ஷை சுவாமியின் அடையாளமாகிய குடையும், வெஞ்சாமரையும், சுவாமியின் கொடியையும், இன்னும் அநேக அடையாளங்கள் கொண்டுவந்து அங்காங்கே கோயில்களை உற்பத்தி செய்து, நமது ஜாதிக்கு ஆதி குருபீடமாகிய கலசபாடியில் தேனாண்டை
வம்சத்தை ஷை சுவாமி காரியத்திற்காக குருகாணிக்கை நமது குல

விளக்கம்:

இந்தப் பக்கம் உங்கள் வம்சத்தின் அடையாளத்தை நிலைநாட்டும் "வரலாற்றுப் சாசனம்" போல அமைந்துள்ளது:

1. பெயர்க்காரணம்: கால்நடைகளை மேய்க்க மலைகளுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டதால், சமவெளியில் இருப்பவர்கள் (அடிநாட்டார்கள்) இவர்களை "மலையாளிகள்" என்று அழைக்கத் தொடங்கினர். ஆனால், கேரளா மலையாளிகளுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை (அவர்கள் மொழி மற்றும் கலாச்சாரம் வேறு) என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

2. காராளர் விளக்கம்: "முதலிமார்" என்பது செங்குந்தர் அல்ல; சோழர் காலத்தில் பயிர் தொழில் மற்றும் மேய்ச்சல் தொழில் செய்ததால் "கார் ஆளர்" (மேகத்தை/மழையை ஆள்பவர்கள் அல்லது விவசாய நிலத்தை ஆள்பவர்கள்) என்று பெயர் வந்ததாகக் கூறுகிறது.

3. கவுண்டர் பட்டம்: கொங்கு வேளாளர் மற்றும் வன்னியர் பயன்படுத்தும் 'கவுண்டர்' பட்டத்தை இந்தப் பிரிவினரும் பயன்படுத்துகிறார்கள்,இவ்விரு இனமும் இல்லை. ஆனால் இவர்கள் தனித்துவமான "காராள முதலி" வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

4. பரவலாக்கம்: ஜவ்வாது மலை, கொல்லி மலை, பச்சை மலை,ஏலகிரி மலை,கல்வராயன் மலை,சேர்வராயன் மலை,வத்தல் மலை மற்றும் ஈரோடு மாவட்ட சில பகுதிகள் ஆகிய இடங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மலையாளிகள் அனைவரும் ஒரே இனத்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

5. ஆன்மீகப் பூர்வீகம்: காஞ்சீபுரத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட காராள குல பெரியவர்கள் (காராள குல முதலிமார்கள்) காஞ்சி வரதராஜப் பெருமாளின் அடையாளங்களான குடை, சாமரம், கொடி ஆகியவற்றுடன் வந்து அங்காங்கே கோயில்களை உருவாக்கியுள்ளனர். சித்தேரி மலை, கலசபாடியில் உள்ள தேனாண்டை வம்சம் ஆதி குருபீடமாகத் தேந்தெடுக்கப்பட்ட வரலாற்றையும் இது விளக்குகிறது.

இந்த ஏழாவது (இறுதி) ஆவணப் பக்கத்தில் உள்ள வரிகளை வரி மாறாமல் கீழே வழங்குகிறேன். இந்தப் பக்கம் இந்தத் தீர்மானங்கள் எந்தெந்தப் பகுதிகளுக்குப் பொருந்தும் என்பதையும், ஆவணத்தை முடித்து வைத்த குருவின் பெயரையும் குறிப்பிடுகிறது.

ஆவணத்தில் உள்ள தமிழ் வரிகள்:

தார்களிடம் வசூல்செய்யவும் மேலும் நமது குலத்திற்கு பெரிய பீடமாகவும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தற்காலத்தில் இதை சிலர் அடியோடு மறந்துவிட்டு குரு வணக்கத்தையும், குருவுக்கு முற்காலத்தில் ஏற்பட்ட குரு காணிக்கையும் மறந்து விட்டு வருகிறார்கள். அம்மாதிரி நடவாமல் நமது ஜாதிக்கு நற்பெயரும் நல்ல மதிப்பும் இனிகொண்டுவரும்படி இதன்மூலியமாய் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இனிமேற்கொண்டு நமது ஜாதியைப்பற்றிய சீர்திருத்தம், நம் விஷயத்தைப்பற்றியும் அபிவிர்த்தியைப்பற்றியும், கடவுளின் வணக்கத்தைப்பற்றியும், ஆலய வழிபாடுபற்றியும், குருவின் காணிக்கையைப்பற்றியும், பெரியோர்களின் வணக்கத்தைப்பற்றியும் அடிக்கடி பிரசுரம் மூலியமாய் வெளிவரும்.

மேல்கண்ட சீர்திருத்தம் (தமிழ் பேசும் மலைபாள தேசமாகிய,சித்தேரி மலைநாடு, அரியகவுண்டன் மலைநாடு,குறும்பகவுண்டன் மலை
நாடு, அன்னதான ஜடயகவுண்டன் மலைநாடு, பெரிய கல்ராயன் மலைநாடு,
சின்னகல்ராயன் மலைநாடு, சேர்வராயன் மலைநாடு, வத்தல மலைநாடு,கொல்லி மலைநாடு, பச்சைமலைநாடு,பால மலைநாடு, காலிமலைநாடு, ஜவ்வாது
மலைநாடு, ஏலகிரி மலைநாடு, பர்கூர் மலைநாடு, மைசூர் சமஸ்தானத்திலும்,
கோயம்பத்தூர் ஜில்லா பூனாச்சிமலையில் வாசஞ்செய்யும் காராள வம்ச தமிழ் பேசும் மலையாளருக்கும் மேல்கண்ட தீர்மானம் செலாவணி ஆகும்.

தமிழ் பேசும் மலையாள ஜாதியின் பிறப்பு வளத்தைப்பற்றியும் ஜாதி உற்பத்தியைப்பற்றியும் இதற்கு குருவின் சரித்திரத்தைப்பற்றியும், நம்குல
தெய்வமாகிய கரிராமர் என்று அழைக்கும் ஸ்ரீ காஞ்சி கரிவரதராஜ பெருமாளின் மகிமையைப்பற்றியும் சாஸ்திரபடி உண்மையான சரித்திரம் ஒவ்வொரு நம்முடைய ஜாதியாருக்கு குருவால் பின்னால் பிரசுரிக்கப்படும்.

இப்படிக்கு ஆசிர்வாதம்.
இப்படிக்கு தமிழ் பேசும் மலையாள ஜாதியின் லோககுருவாகிய
குலசேகரன் என்ற பட்டமும் தேனாண்டை என்ற பட்டமும்பெற்ற,
தொம்பகல். லக்ஷ்மணதுரை.
என் சீலும் முத்திரையும்
போடப்பட்டது.

விளக்கம்:

இந்த இறுதிப் பக்கம் மிக முக்கியமான தகவல்களுடன் முடிவடைகிறது:

1. பகுதிகள்: இந்த விவாகச் சீர்திருத்தச் சட்டம் எந்தெந்த மலைநாடுகளுக்குப் பொருந்தும் என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. சித்தேரி, கல்ராயன் (பெரிய & சின்ன), சேர்வராயன், கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி, பர்கூர் மற்றும் மைசூர் சமஸ்தானம், கோயம்புத்தூர்(இன்று ஈரோடு) பூனாச்சிமலை வரை வாழும் தமிழ் பேசும் மலையாளர்களுக்கு (காராள வம்சம்) இது பொருந்தும்.

2. எதிர்காலத் திட்டம்: ஜாதியின் வரலாறு, குலதெய்வமான காஞ்சி வரதராஜப் பெருமாளின் மகிமை மற்றும் ஜாதி உற்பத்தி குறித்த விரிவான சரித்திரம் எதிர்காலத்தில் குருவால் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

3. முக்கியப் பொறுப்பு: மக்கள் குரு வணக்கத்தையும், காணிக்கையையும் மறக்கக் கூடாது என்றும், சமூகத்தின் நன்மதிப்பைக் காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4. கையெழுத்து: இந்த ஆவணத்தை வெளியிட்டவர் தொம்பகல் லக்ஷ்மணதுரை. இவர் "குலசேகரன்" மற்றும் "தேனாண்டை" ஆகிய பட்டங்களைப் பெற்ற லோககுரு ஆவார்.

ஆவணத்தின் எட்டாவது (கையொப்பங்கள் அடங்கிய) பக்கத்தில் உள்ள வரிகளை வரி மாறாமல் கீழே வழங்குகிறேன். இந்தப் பக்கம் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பல்வேறு ஊர் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பட்டியலைக் கொண்டுள்ளது.

ஆவணத்தில் உள்ள தமிழ் வரிகள்:

இதில் நமது மலையாள லோக குரு
தீர்மானத்தை நாங்கள் ஸ்ரீ கரிராமன்
எழுத்தும் கைநாட்டும் போட்டு சம்மதி
நடக்கும் ஒவ்வொரு மலையாள ஜாதியில்
காராம் பசுவை கழுத்தை அறுத்த தோஷம்
"இது சத்தி"

இப்படிக்கு,
கையொப்பங்கள்:--
1. சித்தேரிமலை குருவின் மந்திரி [கையொப்பம்]
2. ஷையார் காணிமகன் [கையொப்பம்]
3. S. R. சங்கரதுரை பாளையகாரர்
4. [பெயர் தெளிவில்லை]
5. ராமநாட்டார், நாட்டாண்மைக்காரர்
6. வெள்ளையகவுண்டர்,(ஊர் பெயர்)
7. தீர்த்தகிரி நாட்டார், தாதம்பட்டி
8. மோளைய நாட்டார், மானேஜர்(நிறுவனம் பெயர் தெரியவில்லை) தாதம்பட்டி
9. ஷை நாட்டு காணிமகன் ஜடையகவுண்டர்
10. தீர்த்தகிரி நாட்டார், சூரியகடை
11. ஷை நாட்டு காணிமகன் சி.மு. [பெயர்]
12. அ. அருணகிரி கவுண்டர், சிட்டிலிங்கி
13. வேங்கை நாட்டார், நாட்டாண்மை
14. தீர்த்தா நாட்டார், சூரியகடை
15. ஜாகீர் வெள்ளி நாட்டார்
16. தீத்தா நாட்டான், [பெயர்]
17. கல்லிராய(கல்வராயன்) கவுண்டர், நாட்டாண்மை
18. கரியா நாட்டான்
19. ஜடைய நாட்டான்
20. ராமகவுண்டர், தேக்கல்பட்டி
21. அண்ணாமலை கவுண்டர், அரசநத்தம்
22. வெங்கடாஜலகவுண்டர், கலசபாடி
23. லட்சுமணகவுண்டர், கலசபாடி

விளக்கம்:

இந்தப் பக்கம் இந்தச் சீர்திருத்த மசோதாவிற்கான சமூக அங்கீகாரத்தை (Social Ratification) உறுதிப்படுத்துகிறது:

1. சத்தியப் பிரமாணம்: இந்தத் தீர்மானத்தை மீறுவது என்பது "காராம் பசுவின் கழுத்தை அறுத்த தோஷத்திற்கு" சமம் என்று ஒரு கடுமையான ஆன்மீக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "இது சத்தி" (இது சத்தியம்) என்று உறுதி கூறப்பட்டுள்ளது.

2. ஜனநாயக முறை: லோக குருவின் தீர்மானத்தை அந்தச் சமூகத்தின் பல்வேறு பகுதிகளின் தலைவர்கள் (நாட்டாண்மைகள், பாளையகாரர்கள், மந்திரிகள்) கையொப்பமிட்டும் கைநாட்டு வைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

3. ஊர் பெயர்கள்: தாதம்பட்டி, சிட்டிலிங்கி, சூரியகடை, தேக்கல்பட்டி, அரசநத்தம், கலசபாடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த நாட்டு அதிகாரிகள் இதில் இடம்பெற்றுள்ளனர். இது இந்தத் தீர்மானம் எவ்வளவு பரவலாக ஏற்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

4. பதவிப் பெயர்கள்: இதில் 'மந்திரி', 'காணிமகன்', 'பாளையகாரர்', 'நாட்டாண்மை', போன்ற பதவிகள் அக்கால சமூகக் கட்டமைப்பை விவரிக்கின்றன.


திங்கள், 23 மார்ச், 2026

கரியலூர் நடுக்கல்,கல்வராயன் மலை

இடம் : 
கரியாளூர் கல்வராயன் மலைத் தொடரிலுள்ள கிராமம். இவ்வூர் வயலில் உள்ள நடுகல்.

காலம்: 
பல்லவ மன்னன் தந்திவர்மன், ஆட்சியாண்டு 4, கி.பி. 800.

செய்தி : (வட்டெழுத்துக் கல்வெட்டு)

 ஆய்கைவாபாடி ஊரை சேர்ந்த வீரன் வலியார், பொன்னை சென்றது பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் ஆநிரை கவர்தல் போரில் இறந்திருக்கலாம்.

கல்வெட்டு வாசகம்:

1. ஸ்ரீகோவிசைய ஈஸ்வர தந்தி விக்கிரமர்க்கு யாண்டு நான்காவது

2. ஆய்கைவாபாடி வலியார் பொன்னைச் சென்று

(ஏற்காட்டிலுள்ள ஆரிராசன் காடு நடுகல்லிலும் சிரி வலிகையார் என்னும் பெயர் உள்ளது குறிப்பிட தக்கது)

நன்றி -ஆவணம் இதழ் 19, 2008

வெள்ளி, 13 மார்ச், 2026

மலையாள கவுண்டர் குறிப்புகள்

இனம் - காராளர் 

பிற பெயர்கள் - காராள முதலி,மலையாளக் கவுண்டர், மலைக் கவுண்டர்,மலை வெள்ளாளர்,மலையாளி.

பழகுங்குடி பட்டியலில்
சேர்க்கப்பட்ட ஆண்டு -1956 ஆம் ஆண்டு,காமராசர் ஐயா ஆட்சியில்.

1880 ஆம் ஆண்டுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியப்பட்ட இம்மக்களின் பெயர் -
கார்காத்த வெள்ளாளர்,காஞ்சி மண்டல வேளாளர்,கொங்கு வேளாளர்.

வாழும் இடங்கள் - கல்வராயன் மலை தொடர்ச்சிகள்,ஜவ்வாது மலை,ஏலகிரி மலை,சேர்வராயன் மலை,கொல்லி மலை,பச்சை மலை,ஈரோடு மாவட்ட மலைகள்,மேற்கூறிய மலைகள் சுற்றிய நிலப்பகுதிகள்.

பூர்வீகம் - காஞ்சிபுரம்

மலைக்கு குடியேறிய காரணங்கள் - பஞ்சம்,போர்கள்,மன்னர்களின் வரிசுமை,இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பு.

தொழில் - விவசாயம்

மதம் - வைணவம்,சைவம்

வைணவ தலைமை கடவுள் - காஞ்சிபுரம் கரி வரதராஜ பெருமாள் (கரிய பெருமாள்,கரிராமன்)

சைவ தலைமை கடவுள் - திருவண்ணாமலை அண்ணாமலையார்

பச்சை மலை குரு மற்றும் ராஜா - தங்கராஜ் கவுண்டர்,சேந்தகம் ஊர்.

கொல்லிமலை குரு மற்றும் ராஜா-பார்த்திபன் கவுண்டர்,ஆதி மலையன் சக்கரவர்த்தி குலம்,வளப்பூர் நாடு

சேர்வராயன் மற்றும் கல்வராயன் மலை குரு - குலசேகரன் பட்டம் கொண்ட லட்சுமண கவுண்டர்,தேனாண்டை குலம்,தேனாண்டை மலை(சித்தேரி உள்ளிட்ட மலைகள்),கலசப்பாடி கிராமம்.

மற்ற இரண்டு குருவும் தேனாண்டை லட்சுமண குருவுக்கு கட்டுப்பட்டவர்கள்.

(குறிப்பு - குலசேகரன் என்பது பாண்டிய மன்னர்களின் பெயர்களில் ஒன்று)