ஞாயிறு, 24 மே, 2026

காராளர் முத்து நாடன் (Karalan Muthu Nadan)

காராளன் முத்து நாடன்

கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் வெள்ளீஸ்வரர் கோவிலில்,காராளர்(மலையாளி) இன மக்களில் ஒருவரான முத்து நாடன்(நாட்டார்) சிலை உள்ளது.

*இவர் இந்த மலையில் உள்ள வெள்ளார் கிராமத்தை சார்ந்தவர்.

*முத்து நாடன் என்று உள்ளதால் "முத்து நாடு" என்னும் பகுதிக்கு தலைவராக(நாட்டார்) இருந்திருக்க வேண்டும்.முத்து நாடு(முத்த நாடு,முட்ட நாடு) என்னும் பகுதி சேர்வராயன் மலையில் உள்ள மூன்று நாட்டு பிரிவுகளில் ஒன்று.இவர் அந்த பகுதிக்கு தலைவராக இருந்திருக்கலாம்.

*மூன்றாம் இராசேந்திரன் சோழன் காலத்தில்(கி.பி.1260),வெள்ளிமலை வெள்ளீஸ்வரர் கோவிலுக்கு குருணி அரிசி கொண்டு படைக்க,பன்னிரண்டு ஊரை சார்ந்தவர்கள்,வெள்ளாறு ஊர் சபையில் ஒன்று கூடி இவர் தலைமையில் முடிவு எடுக்கிறார்கள்.

*வெள்ளிமலை கல்வெட்டில் வெள்ளாருடையான் முத்து நாடன் என்று உள்ளது.

செவ்வாய், 19 மே, 2026

வெள்ளிமலை வெள்ளீஸ்வரர் கோவில் கல்வெட்டு,கல்வராயன் மலை.(Kalvarayan Hill's inscription)

கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலைக் கிராமத்தின் வெள்ளி ஈஸ்வரர்(வெள்ளீஸ்வரர்)
திருக்ககோவிலில் கண்டறியப்பட்ட இந்த அரிய கல்வெட்டு, பிற்கால சோழர் காலத்து வரலாற்றை பறை சாற்றும் முக்கிய ஆவணமாகும்.

இம்மலையில் காராளர் என்னும் மக்கள் வாழ்கிறார்கள்.இவர்களது பூர்வீகம் காஞ்சிபுரம் ஆகும்.
(மலையாளி,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை முதலி,மலையாள முதலி,மலை நாயக்கர்,மலை வெள்ளாளர்,மலையாண்டி வெள்ளாளர்,பச்சை வெள்ளாளர்,காராள கவுண்டர்,காராள முதலி என்பது இவர்களின் பிற பெயர்கள்.)

கல்வெட்டுப் படத்தையும் அதன் விரிவான விளக்கத்தையும் கீழே காணலாம்.

அடிப்படைத் தகவல்கள்:

இடம்:  வெள்ளிமலை கிராமம், கல்வராயன்மலை வட்டம்
(வெள்ளி ஈஸ்வரர் கோயில்).
காலம்:  பொ.யு. 1260 (மார்ச் மாதம்).
மன்னன்: மூன்றாம் இராசேந்திர சோழன் (சோழ வம்சத்தின் கடைசி அரசர்).
ஆட்சியாண்டு: 14-ஆட்சியாண்டு.

கல்வெட்டுப் வரிகள்:

முன்பக்கம்:
1. ஸ்வஸ்திஸ்ரீதிரிபு
2. வனச் க்கரவத்
3. திகள்ஸ்ரீஇராசேந்தி
4. ர சோழ தேவர்
5. ண்டு யச -வது வ
6. ட மலை கள்ளூரா
7. கிய ம(மு)ள்ளூர் காநத்
8. து மதுவூர் பற்று நா
9. ட்டு திருக்கோவிற்
10.திருவெள்ளாறுடை
11.ய நாயனாற்கு திருவ
12.முதுக்கு மதுவூர் பற்
13.றில் பன்னிரண்டு குறி
14.ச்சி நாட்டவருங் குறு
15.ம்பகளும் வெள்ளா
16.ற்று மன்றில்கூடியி

பின்பக்கம்:
17. ருந்து குடிக்கு கு
18. றுணியால் வந்த
19. தானியம் ஆட்டை
20. வரை குடுக்க கட
21. வோமாக சம்மதி
22. த்தோம் சந்திரா
23. தித்த வரையி
24. ங் குடுக்க கட
25. வோம் வல்லவரை 
26. யன் சத்தியம்
27. இது நாட்டை நாட்
28. டி வெள்ளாறுடை
29. யான் முத்து நாட
30. ன் எழுத்து
31. (சிதைந்துள்ளது) 

விரிவான விளக்கம்:

இந்தக் கல்வெட்டு மலை மக்களின் தான சாசனம் அல்லது ஒரு சமூகக் கூட்டமைப்பின் ஒப்பந்தமாகும். இதன் முக்கியக் கூறுகள்.

1.சோழப் பேரரசு வலுவிழந்து கொண்டிருந்த காலத்தில்,(கி.பி-1260) இராசேந்திர சோழனின் 14-ஆம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

2.கல்வராயன்மலையின் ஒரு பகுதி 'வடமலை' என்று அழைக்கப்பட்டுள்ளது. வடமலையில் உள்ள கள்ளூராகிய முள்ளூர் காணத்தில்(அடர்ந்த மலை பகுதி) 'மதுவூர்(மதூர்) பற்று' நாட்டில் உள்ள(இன்றைய சடைய கவுண்டர் நாட்டில் ஒரு துணை நாடு) 'திருவெள்ளாறுடைய நாயனார்' (வெள்ளி ஈஸ்வரர்) க்கு 'திருவமுது' எனப்படும் இறைவனுக்கான நைவேத்தியப் படைப்பிற்காக,மதுவூர்(மதூர்) பற்று நாட்டில் குறிச்சியிலுள்ள(மலையிலுள்ள) பண்ணிரெண்டு நாட்டவர்களும்(ஊரை சார்ந்தவர்களும்), குரும்பகளும்,வெள்ளாறு என்னும் ஊரில் ஒன்று கூடி, ஆண்டுக்கு ஒருமுறை,குறிப்பிட்ட அளவுள்ள குறுணி அரிசியை கோவிலுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

3.இதை சந்திரன் சூரியன் இருக்கும் வரை கடைப்பிடிப்போம்.இது வல்லவரையன் சத்தியம் என்று கூறுகிறார்கள்.இந்த கூட்டத்தை கூட்டி தலைமையேற்ற வெள்ளாறுடையான்
(வெள்ளாறு ஊரை சார்ந்த) முத்து நாடன்(நாட்டார்) என்பவர் சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார்.

சில விளக்கங்கள்:

வடமலை:
கல்வராயன் மலை என்னும் பெயர் வருவதற்கு முன் கூட்டியே சோழர் காலத்தில்,இந்த மலையின் ஒரு பகுதி வடமலை என்று அழைக்கப்பட்டுள்ளது.அப்போ தென் மலை என்று ஒரு பகுதி இருந்திருக்க வேண்டும்.

கள்ளூராகிய முள்ளூர்:
முள்ளூர் என்னும் பகுதி கள்ளூர் என மாறியிருக்கிறது.அதை கல்வெட்டில் திருத்தியிருக்கிறார்கள்.
மலையமான்களின் முள்ளூர் மலை இந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் பிற கல்வெட்டுகளில் இந்த மலை பகுதி "மிலாடாகிய சனனாத வள நாட்டு துறவி நாடு" என்று காணப்படுகிறது.இந்த கல்வெட்டில் மேற்சொன்ன நாட்டு பிரிவு இல்லை, "வடமலை கள்ளூர் ஆகிய முள்ளூர் கானம்" என்று உள்ளது.


மதுவூர் பற்று நாடு: 
மதுவூர் என்பது இன்று மதூர் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.இது இன்று சடைய கவுண்டன் நாட்டில் உள்ள நான்கு நாட்டில்,இது ஒரு துணை நாடு ஆகும்.

இதில் உள்ள பன்னிரண்டு கிராமங்கள் பின்வருமாறு:
1.வெள்ளிமலை
2.வாழப்பாடி
3.மாயம்பாடி
4.சாத்தனூர்
5. கெண்டிக்கல் 
6.மதூர்(சில பேர் பேச்சு வழக்கில் மரூர் என்கிறார்கள்)
7.கங்காபாடி
8.வண்ணியூர்
9.ஆரம்பூண்டி
10.மல்லியம்பாடி
11.பரங்கி நத்தம்
12.தேவனூர் 

வல்லவரையன் சத்தியம்:

பன்னிரண்டு நாட்ட்டவர்களும் வல்லவரையன் மேல் சத்தியம் செய்கிறார்கள்.இது வல்லவரையன் என்பவர் இந்த இனத்தை சார்ந்தவனாக இருக்க வேண்டும்.அல்லது மக்களின் நம்பிக்கை பெற்ற குறுநில மன்னனாக இருக்க வேண்டும்.

வல்லவரையன் என்னும் குறுநில மன்னன் வேலூர் மாவட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்,தருமபுரி மாவட்டம்,கிருஷ்ணகிரி மாவட்டம்,விழுப்புரம் மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட கல்வெட்டுகளிலும் காணப்படுகிறார்.
இவர் சோழர் காலத்திலும், போசளர் காலத்திலும் மற்றும் நுளம்பர் காலத்திலும் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்.இவர் வாணர் (வாணாதிராயர்) குலத்தை சார்ந்தவர்.

இவர் ஆண்ட பகுதி வல்லவரையன் நாடு என்று அழைக்கபடுகிறது.(சில பேர் வேலூரில் இருக்கும் வல்லம் மற்றும் அதன் சுற்றுபகுதியை ஆட்சி செய்தவன் என்கிறார்கள்.சில பேர் செய்யாறு வட்டத்தில் உள்ள பிரம்மதேசம் பகுதியை ஆட்சி செய்தவர் என்கிறார்கள்.)

கோவை மாவட்ட கல்வெட்டுகளில் வெள்ளாளரில் பூத்தந்தைகளில் மணிய மறையனான இராசராச வல்லவரையன் என்று கல்வெட்டு ஒன்று உள்ளது.

முத்து நாடன்:

முத்து நாட்டிற்க்கு தலைவர் அல்லது நாட்டார் ஆக இருந்தவர்.கல்வராயன் மலையில் முத்து நாடு என ஒன்று இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் சேர்வராயன் மலையில் உள்ள மூன்று நாட்டு பிரிவுகளில் முத்து நாடு (முத்த நாடு,முட்ட நாடு) பிரிவை ஆள்பவராக இருந்திருக்க வேண்டும்.

குறும்பகள்:

இதில் வரும் குறும்பகள் என்னும் பெயருக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது.

1.முல்லை நிலமாகிய காடுகளும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும் நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடையும் போது பாலை என்னும் நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 
இந்நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை மறவர், எயினர், வேடர் எனப் பலவாறு அழைத்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் குறும்பு என அழைத்தனர். இவர்களின் தலைவர்களாக மீளி, காளை என்ற விருதுப்பெயர் கொண்டோர் விளங்கினர்.

2.குறும்பர் என்னும் இனம்.இவர்களின் பேச்சு மொழி கன்னடம் கலந்த குருபா மொழி ஆகும்.இந்த மொழி இம்மலையில் யாரும் பேசுவதில்லை.இவர்களின் குல தெய்வ வழிபாடும் இந்த மலையில் இல்லை.
நில பகுதியில் இருந்து வந்து சாமி கும்பிட்டவர்களாக இருக்கலாம்.அல்லது மலையில் குடியிருந்து சில காலம் கழித்து வெளியேறி இருக்கலாம்.

 வெள்ளீஸ்வரர் கோவில்:
இந்த பெயருடைய கோவில் சென்னையில் மயிலையிலும்,மாங்காடு ஊரிலும் மற்றும் ஆரணி ஊரிலும் உள்ளது.
இந்த தலங்கள் வெள்ளி(சுக்கிரன்) தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.இங்கு காமாட்சி அம்மன் உடனுறை அம்மனாக காட்சி தருகிறார்.

அதே பெயருடைய கோவில் கல்வராயன் மலையில் இருப்பதும்,இந்த கோவில் இருக்கும் பகுதி,சுக்கிரன் என்னும் பொருளில் "வெள்ளி" மலை என அழைக்கப்படுவதும்,இந்த மலை மக்கள் தைலம்மாள் என்னும் பெயரில் காமாட்சி அம்மனை வழிபடுவதும் வியப்பாக இருக்கிறது.

மன்னர்கள் காலத்தில் சென்னை ஆரணி உள்ளிட்ட பகுதிகள் தொண்டை மண்டலம்(காஞ்சி மண்டலம்) என்று அழைக்கப்பட்டது.
இந்த மலை வாழ் காராளர் இன மக்கள் இந்த காஞ்சி மண்டலத்திலிருந்து(ஆரணி அல்லது சென்னை) மலைக்கு குடியேறி இருக்கலாம்.

கல்வெட்டு செய்தி பகிர்ந்தவர்: 
பொன் வெங்கடேசன் ஐயா,
கல்வெட்டு ஆய்வாளர்,
சேலம் வரலாற்று ஆய்வு மையம்.


4.மலை வெள்ளாளர் தோலன் பிள்ளன் கல்வெட்டு (4.Malai Vellalar's inscriptions )

4.மலை வெள்ளாளர் தோலன் பிள்ளன் கல்வெட்டு 


ஊர் : கோயம்புத்தூர்
அரசு : வீரகேரளர்
மன்னன் : வீரநாராயணன்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
இடம்:சங்கமேசுவரர் கோயில் கருவறை வடக்குக் குமுதம்

விளக்கம்:

வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளன் ஆன திருஞானசம்பந்தன் என்பான் சங்கீசுவரரர் கோயிலில் திருக்கார்த்திகை நாளில் இறைவன் எழுந்தருளவும், திருஅமுதுக்கும் அச்சுக்காசுகள் கொடையளித்தமை பற்றி இக்கல்வெட்டு கூறுகின்றது.

கல்வெட்டு:

1. ஷ்வஸ்தி ஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு ஆறாவது வீரகேரள நல்லூர் வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளநான திருஞாநசம்பன்தந்

2. நேன் ஆளுடையார் சங்கீசுவரமுடையாற்குத் திருக்காத்திகைக்கு எழுந்தருளுகைக்கு... அற்றைக்கு அமுதவெஞ்சநாதிகளுக்கும் நான்னொடுக்கிந அச்சு... ஒன்றும் சந்திராதித்தவரை இருக்கின்ற... திருஞானசம்பந்தர் நல்லூர்

( "பிள்ளன்"என்னும் குலம் கொல்லிமலை மற்றும் பச்சை மலை காராளர்(மலையாளி) மக்களிடையே இன்றும் வழக்கத்தில் உள்ளது.)
மலை வெள்ளாளர்கள் என்பவர்கள் கொல்லி மலையிலிருந்து கோவை மற்றும் ஈரோடு மாவட்ட பகுதிகளுக்கு சென்று விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.பின் பஞ்சம், கொள்ளை மற்றும் போரின் காரணங்களால் அங்கிருந்து ஈரோடு மலை பகுதிக்கு சென்று மலை விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.)
(இவர்களுக்கு மலையாளி,மலை முதலி,மலையாள முதலி,மலையாள கவுண்டர், மலைக்கவுண்டர்,காராளர், காராள முதலி மற்றும் காராளக் கவுண்டர் என்பவை பிற பெயர்கள் ஆகும்.)

நன்றி - கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் புத்தகம்

3.மலை வெள்ளாளர் கேசன் கோன் தமிழ் வேளாண் கல்வெட்டு(3.MALAI VELLAALAR'S INSCRIPTION)

3.மலை வெள்ளாளர் கேசன் கோன் தமிழ் வேளாண் கல்வெட்டு

கல்வெட்டு செய்தி:

கி.பி 1231 ஆம் ஆண்டு கொங்கு சோழர் வீர ராஜேந்திரன் ஆட்சி காலத்தில்,வட பரிச நாட்டு கவையன் புத்தூர்(கோவை) வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் தமிழ் வேளான் என்பவர் காலகாலதேவர் கோவிலில் பெரிய திரு மண்டப நாயக தூண் ஒன்றை கொடையாக வழங்கியுள்ளார்.

இடம் - காலகாலேசர் கோவில்,கோவில் பாளையம்,கோவை

நூல் - கோவை மாவட்ட கல்வெட்டுக்கள்

மலை வெள்ளாளர்(MALAI VELLALAR) இன மக்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைகளில் வசிக்கிறார்கள்.இவர்கள் கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற காராளர்(KARALAR) இன மக்கள் ஆவர்.

கொல்லிமலையில் இருந்து குடியேறிய மலைவாழ் காராளர் மக்கள் முதலில் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துள்ளனர்.பின் பஞ்சத்தின் காரணமாகவோ,கொள்ளை சம்பவம் காரணமாகவோ ஈரோடு மலைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்(புலவர் இராசு ஐயா).

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் இம்மக்களுக்கு காராள கவுண்டர்(KARALA GOUNDAR),காராள முதலி(KARALA MUDHALI),மலையாளி(MALAYALI) மற்றும் மலையாள கவுண்டர்(MALAYALA GOUNDAR) என்ற பெயரும் உண்டு.

கல்வெட்டுகளில் இவ்வின மக்களை மலையாளர்,வெள்ளாளர் மலையர்,
மலையாள முதலி என குறிப்பிடுவதை பார்க்கலாம்.


1.மலை வெள்ளாளர் தில்லை கூத்தன் கல்வெட்டு(1.MALAI VELLALAR' S INSCRIPTION )

மலை வெள்ளாளர் தில்லை கூத்தன் கல்வெட்டு

மலை வெள்ளாளர்(MALAI VELLALAR) இன மக்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைகளில் வசிக்கிறார்கள்.இவர்கள் கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற காராளர்(KARALAR) இன மக்கள் ஆவர்.

கொல்லிமலையில் இருந்து குடியேறிய மலைவாழ் காராளர் மக்கள் முதலில் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துள்ளனர்.பின் பஞ்சத்தின் காரணமாகவோ,கொள்ளை சம்பவம் காரணமாகவோ ஈரோடு மலைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்(புலவர் இராசு ஐயா).

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் இம்மக்களுக்கு காராள கவுண்டர்(KARALA GOUNDAR),காராள முதலி(KARALA MUDHALI),மலையாளி(MALAYALI) மற்றும் மலையாள கவுண்டர்(MALAYALA GOUNDAR) என்ற பெயரும் உண்டு.

கல்வெட்டுகளில் இவ்வின மக்களை மலையாளர்,வெள்ளாளர் மலையர்,
மலையாள முதலி என குறிப்பிடுவதை பார்க்கலாம்.

கி.பி.1313 ஆம் ஆண்டு சுந்தர பாண்டியர் ஆட்சி காலத்தில்,கொங்கு பாண்டியர் ஆண்ட கொங்கு பகுதியில்,ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் குன்னத்தூர் ஊரிலுள்ள,இலட்சுமி நாராயணன் கோவிலில் இவ்வினத்தை சேர்ந்த தில்லை கூத்தர் (தந்தை பெயர் சிதைந்துள்ளது) என்பவர்,கோவிலில் ஒரு சந்தியா தீபம் ஏற்ற,பூசாரி ஒருவருக்கு பணம் கொடுத்த செய்தி கல்வெட்டாக உள்ளது.

இடம்: இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் தெற்குச் சுவர்.

விளக்கம் : இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன் அழகப்பெருமாள், மலையாளரில் தில்லைக்கூத்தரிடம் பன்னிரண்டு பணம் பெற்றுக் கொண்டு ஒரு சந்தியா தீபம் எரிக்க ஒப்புக்கொண்டார்.

மாவட்டம் : ஈரோடு
ஆட்சி ஆண்டு : 28
வட்டம் : பெருந்துறை
வரலாற்று ஆண்டு : 1313
ஊர் : குன்னத்தூர்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 187/1967-68
அரசு : கொங்குப் பாண்டியர்
அரசன் : சுந்தரபாண்டியன்

கல்வெட்டு:

1. ஹஹிஸ்ரீ கோச்சடபன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு உயஅ ஆடி மாதம் குறுப்பு நாட்டுக்

2. குன்றத்தூர் ல
க்ஷிநாரயணப் பெருமாள் னம்பிமாரில் ஹாரதாஜி திருவேங்கடநாதன் அழகப்பெருமாளேன் மலையாளரில் கண

3.......ர்மகன் தில்லைக்கூத்தர்க்காக இன்னாயனார் திருமுன்பே ஒரு ஸநாசீபம் வடிாஷித்தர்வரை ரிப்பதாக இவர் பக்கல் வாங்கின பணம் யஉ இப்

நூல் - ஈரோடு மாவட்ட கல்வெட்டுகள்
தொடர் எண் :- 1105/2003



2-மலை வெள்ளாளர் சோழ காமிண்டன் கல்வெட்டு(மலையாளி, காராளர்)(MALAI VELLAALAR INSCRIPTION -2)

மலை வெள்ளாளர் சோழ காமிண்டர் கல்வெட்டு

கல்வெட்டு செய்தி:

கி.பி.1276 ஆம் ஆண்டு,கொங்கு சோழர்,மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சி காலத்தில் இடிகரையில் வாழ்ந்த வெள்ளாளன் மலையரில்(மலை வெள்ளாளர்) சோழ காமிண்டன் என்பவர் வில்லீஷ்வரர் கோவிலில் சந்தி விளக்கு ஒன்றை கொடையாக கொடுத்துள்ளார்.

நூல் - கோவை மாவட்ட கல்வெட்டுக்கள்
கொல்லிமலையில் இருந்து குடியேறிய மலைவாழ் காராளர் மக்கள் முதலில் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துள்ளனர்.பின் பஞ்சத்தின் காரணமாகவோ,கொள்ளை சம்பவம் காரணமாகவோ ஈரோடு மலைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்(புலவர் இராசு ஐயா).

சேர்வராயன் மலை மற்றும் கொல்லி மலையில் வாழும் காராளர்(மலையாள கவுண்டர்) இன மக்களில் மலையர் வீடு என்னும் குலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மலையில் வாழும் காராளர் இன மக்களுக்கு மலை வெள்ளாளர் என்னும் பெயரும் மலையாளி(இடம் சார்ந்த பெயர்),மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உள்ளது.



திங்கள், 18 மே, 2026

salem gazetteer ல் கல்வராயன் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்.

மதராஸ் மாவட்ட பதிவுகளில் கல்வராயன் மலை கல்வெட்டுகள்
(Kalvarayan inscriptions in Madras District gazeteer)

கோவில்புதூரில் உள்ள கரிய வரதராஜ பெருமாள்(கரிய பெருமாள்,கரிராமன்)கோயில், இந்த மலையின் அனைத்து மலையாளிகளாலும் ஒரு தேசிய ஆலயமாகப் போற்றப்படுகிறது என்பது உண்மை.

மலையாளிகள் தாங்களாகவே,கரி வரதராஜ பெருமாள்(கரிராமன்) கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு கல்லில் பொறிக்கப்பட்ட ஒரு பதிவை தங்கள் தோற்றத்திற்கு சான்றாகக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பதிவு வாய்மொழியாகத் திருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

1. திரு. லே பாஃனு அதன் பின்வரும் மொழிபெயர்ப்பைத் தருகிறார்: 

"இந்த கல்வராயன் மலை வேணுவராயன்(வாணவராயன்) என்ற அரசனால் ஒதுக்கப்பட்டது,இவர் வெவ்வேறு நிறத்தில் ஒரு லட்சம் குதிரைகளை வைத்திருந்தவர்.
சின்ன கல்விராயன்(கல்வராயன்) மற்றும் பெரிய கல்விராயன்(கல்வராயன்) ஆகிய நாடுகளில் உள்ள கரிய பெருமாள் மற்றும் பிற தெய்வங்களை வணங்குவதற்காக தேர் மற்றும் பிற விழாக்களை கொண்டாடுவதற்கு பரிசாக இந்த மலைகள் வழங்கப்பட்டுள்ளது.ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதை பின்பற்ற வேண்டும், மேலும் மேற்கூறியவற்றைச் செய்ய தவறுபவர்கள், கங்கை கரையில் காராம் பசுவைக் கொன்றவருக்குச் சமமான குற்றவாளிகளாக இருப்பார்கள்".

வாணவராயன் - ஆறகளூரை தலைமை இடமாக கொண்டு ஆத்தூர்,கல்வராயன் மலைகளை உள்ளடக்கிய மகதை மண்டலத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்.
ஏழு நாடுகள் - கடைய நாடு, தென்மலை நாடு,ஆதிப்பதி நாடு,மதூர்(மடு) நாடு,உழவு நாடு,தென் நாடு,வட நாடு,மேல் நாடு மற்றும் கீழ் நாடு.
(தென்மலை நாடு என்று வருவதால் வடமலை நாடு என்ற நாடு இருந்திருக்க வேண்டும்.அந்த நாடு சின்ன திருப்பதி இருக்கும் பகுதியாக இருக்கலாம்.சின்ன திருப்பதி பெருமாளுக்கு வடக்கு மலையான் என்ற பெயரும் உண்டு)

(கள்ளிப்பாறை நாடு,உப்பு நாடு,தும்பை நாடு மற்றும் சுண்டப்ப நாடு ஆகிய நான்கு நாடுகள் பின்னாட்களில் உருவாக்கப்பட்ட ஊர்களாக இருக்கலாம்.)

2. இனாம் துறை கலெக்டர், 1866 ஆம் ஆண்டு பிஸ் அறிக்கையில், பெரிய-கல்ராயண் நாட்டில் உள்ள ஒரு கல்லில் உள்ள இரண்டு கல்வெட்டுகளைக் குறிப்பிடுகிறார்.

 முதல் கல்வெட்டு:

 ரௌத்ரி ஆண்டின் 21வது மார்கழி, சாலிவாகனா 942 (=1020 கி.பி.) தேதியில்,கல்வராய கவுண்டர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை,நான்கு எல்லைகளுடன்,கடவுள் கரிய பெருமாளுக்கு வழங்கினார்" என்று பதிவு செய்துள்ளது

கரிய பெருமாள் - கரிராமர் அல்லது கரிய வரதராஜ பெருமாள்.

கல்வராயன் கவுண்டர் - கல்ராயன் அல்லது கல்விராயன்

இரண்டாவது கல்வெட்டு:

 சாலிவாஹன 1224 (=1302 கி.பி.) இல் தேதியிடப்பட்ட உதவியாகும், மேலும் "கல்ராய கவுண்டரும், எட்டு கரை நாட்டாரும்" என்ற சொற்களைக் கொண்டிருக்கிறது

3.பழங்காலத்தில் இந்த மலையாளி குடியேற்றத்தை நிரூபிக்க, கல்ராயன் 
பாளையக்காரர், ஜடயகவுண்டன் பாளையகர் வசம் உள்ள நான்கு செப்பு சாசனங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, 
அவற்றில் இரண்டு விஜயநகர மகா கிருஷ்ண ராஜாவின் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1519), மற்ற இரண்டு அச்சுத ராயரின் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1532) இருக்கிறது.

ஞாயிறு, 17 மே, 2026

வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு 3.மதூர் வரதராஜ பெருமாள் கோவில்.

சேர்வராயன் மலையில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில் வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு 

சேர்வராயன் மலை(சேருவா மலை) 
சேல நாடு,
முக நாடு(மொக நாடு),
முட்ட நாடு(முத்த நாடு,முத்து நாடு) 
என மூன்று பிரிவாக உள்ளது.

இதில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவிலில் 3 வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது.

இந்த மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில்,காராளர் என்கிற மலையாள கவுண்டர்களில் தும்புடையார் வீடு குல தெய்வ கோவில் ஆகும்.

பானை 3 கல்வெட்டு:

(பிற)..சொபதி வருடம் சித்திரை மாதம் 22 அனுப்பி..(வசம்)மலையிலிருக்கும் வேங்கடன் செட்டி
மகன் சின்னா செட்டி செருவாமலையிலை
யிருக்கும் மதூரு வருதராசபெருமாளுக்கு
தவலை உபயம்

விளக்கம்:
பிறசோபதி ஆண்டு 1811 அல்லது 1751 ஆக இருக்கலாம்.

பிறசோபதி ஆண்டு சித்திரை மாதம் 22 ஆம் தேதி,மலையிலிருக்கும் வெங்கடன் செட்டியாரின் மகன் சின்னா செட்டி என்பவர் சேர்வராயன் மலையிலிருக்கும்(செருவா மலை) மதூர் வரதராச பெருமாளுக்கு வெங்கல தவிலை தானமாக கொடுத்த செய்தி.

(மலையில் செட்டியார்கள் மளிகை கடை வைத்திருப்பார்கள்.வேங்கடன் செட்டி மலையில் எந்த பகுதியில் வாழ்ந்தவர் என்று தெரியவில்லை.அல்லது வேறு மலையை சேர்ந்தவரா என்று தெரியவில்லை)

வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு 2.மதூர் வரதராஜ பெருமாள் கோவில்.

சேர்வராயன் மலையில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில் வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு.

சேர்வராயன் மலை(சேருவா மலை) 
சேல நாடு,
முக நாடு (மொக நாடு),
முட்ட நாடு(முத்த நாடு,முத்து நாடு) என மூன்று பிரிவாக உள்ளது.

இதில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில் வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது.

இந்த மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில்,காராளர் என்கிற மலையாள கவுண்டர்களில் தும்புடையார் வீடு குல தெய்வ கோவில் ஆகும்.
இக்கோவிலில் உள்ள 3 வெங்கல பானைகளில் எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது

வெங்கல பானை 2:
எழுத்துப் பொறிப்பு:

செலனாட்டு க்குச் சொந்தம தூரழக் காக்கவுண்டன் யிந்தத் தவிலை
வரதராசப்பெருமாளுக்குக் கொடுத்த உபயம் உ 

விளக்கம்:

சேல நாட்டுக்கு சேர்ந்த மதூர் கிராமத்தில் வசிக்கும் அழக்கா கவுண்டன், அவ்வூரிலுள்ள வரதராச பெருமாளுக்கு வெங்கல தவிலை தானமாக கொடுத்த செய்தி.
(இதில் உபயம் 2(உ ) என்று உள்ளது.இரண்டு வெங்கல பானையாக இருக்கலாம்)


இதில் ஆண்டு குறிப்பிடபடவில்லை,எழுத்து உருவம் பார்க்கும் போது 200 வருட முற்பட்ட கல்வெட்டாக இருக்கலாம்.


மதூர் வரதராஜ பெருமாள் வெண்கல பானை எழுத்துப் பொறிப்பு

சேர்வராயன் மலையில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில் வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு.

சேர்வராயன் மலை(சேருவா மலை) 
சேல நாடு,
முக நாடு(மொக நாடு),
முட்ட நாடு(முத்த நாடு,முத்து நாடு) 
என மூன்று பிரிவாக உள்ளது.

இதில் சேல நாட்டிலுள்ள மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவிலில் வெங்கல பானை கல்வெட்டு காணப்படுகிறது.

இந்த மதூர் கிராம வரதராஜ பெருமாள் கோவில்,காராளர் என்கிற மலையாள கவுண்டர்களில் தும்புடையார் வீடு குல தெய்வ கோவில் ஆகும்.
இக்கோவிலில் உள்ள 3 வெங்கல பானைகளில் எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது.

பானை 1 எழுத்துப் பொறிப்பு:

தாதுவர வறசம பெறடாசி மீ யஅ தெதிசே ருவாமல சேர்ந்தமது வுருலிருக்கும் மூகா கவுண்டன்  வருதாற்சபெரு மா ளுக்கு தாவலை வாங்கிவச்ச உபயம் உ 
வெங்கடப்பன்

விளக்கம்:
தாது வருட ஆண்டு கி.பி 1756 அல்லது கி.பி 1816 ஆக இருக்கலாம்.

தாது வருசம் புரட்டாசி மாதம் 18 தேதி சேருவா மலைக்கு(சேர்வராயன் மலைக்கு) சேர்ந்த மதூரிலிருக்கும் மூக்காகவுண்டன் என்பவர் வரதராச பெருமாருளுக்கு தவலை(வெங்கல பானை) வாங்கி உபயம் செய்த செய்தி.

(இதில் தவலை 2(உ) என்று உள்ளது.இரண்டு வெங்கல பானையாக இருக்கலாம்)

 வெங்கடப்பன் என்பவரால் எழுத்து எழுதப்பட்டுள்ளது.

சித்திரமேழி கொல்லன் கல்வெட்டு,ஜவ்வாது மலை

ஜவ்வாது மலை சித்திரமேழி கொல்லன் கல்வெட்டு

இடம்:
வேடியப்பன் கோவில்,
பெரும்பள்ளி கிராமம்,
புங்கம்பட்டு நாடு,
ஜவ்வாது மலை.

காலம்: 12 - 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:

நாவகரும சோமநந்தி என்றழைக்கப்பட்ட சித்திரமேழி (பெரியநாட்டார்) கொல்லனுக்கு காணியாக நிலம் அளிக்கப்பட்டமை.யாரால் அளிக்கப்பட்டது என தெரியவில்லை.

கல்வெட்டு:

1. ஸ்வஸ்தி நாவ

2. கரும

3. சோமந்தி

4. தந் சித்திர

5. மேழிக் கொல்

6. லந் தந் கா

7. ணியாகக்

8. கொடுத்தோ[ம்]

நாவ கரும சோமந்தி என்பவர் சித்திரமெழி கொல்லன்(தட்டான்) என கூறப்பட்டுள்ளார்.எனவே இவர் சித்திரமேழி பெரிய நாட்டார் குழுவில் ஒருவராக இருக்க வேண்டும்.

சித்திரமேழி பெரியநாட்டார் என்பவர்கள் ஒரு வணிக குழுவினர்.இவர்கள் வேளாண்மை பொருள்கள் எங்கு அதிகமாக கிடைக்குமோ அங்கெல்லாம் சென்று பொருள் வாங்கி வியாபாரம் செய்பவர்கள்.

இக்கல்வெட்டின் மூலம் 12 ஆம் நூற்றாண்டில் ஜவ்வாது மலையில்(நவிரமலை) உழுது பயிர் செய்யும் வேளாண் தொழில்கள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.

நன்றி- ஆவணம் இதழ் 24




ஜவ்வாது மலை காராளர்(மலையாளி) இன மக்கள் வாழும் நாடுகள்.

ஜவ்வாது மலை மக்கள் காரைக்காட்டு வெள்ளாளர்,கார்காத்தவெள்ளாளர், காராளர்,மலை வெள்ளாளர், காராளக் கவுண்டர்,மலையாளி,மலையாள கவுண்டர்,பூபாள முதலி மற்றும் மலையாள முதலி என்னும் பெயர்களில் அறியப்படுகிறார்கள்.  

ஜவ்வாது மலையில் 18 நாடுகளில் இவர்கள் வாழ்கிறார்கள்.இம்மக்களின் பெரிய பட்டகாரன் (ராஜா) கணமலை நாட்டில் வசிக்கிறார்.


(திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றியம்)

1. வீரகவுண்டனூர் நாடு

1. இந்திரா நகர்

2. எம்.ஜி.ஆர்.நகர்

3.பண்டிரேவ்

4.குட்டூர்

5. புதூர்

6.அரசனூர்

7.எண்டரப்பட்டு

8. கல்பிளந்தனூர்

9. கோவில்கொல்லை

10. மேட்டன்கல்லூர்

11. ஊர்கவுண்டனூர்

12. பம்பாத்தூர்

2.வீரப்பனூர் நாடு

1.குட்டிகவுண்டர்கொட்டாய்

2. முருகனேரி
3. வாலோத்தூக் கொல்லை

4. ஒடமங்கலம்
5. மேல்கொல்லை

6.மேல்வெள்ளிதாதன் கொட்டாய்

7.பூமரத்தூக்கொல்லை
8.வீரப்பனூர்

9.சடையனூர்,
10.மலைக்கொல்லை

11.அரசவல்லி
12.பர்கூர்

13.எட்டிமரத்துர்

14.கள்ளிப்பாறை
15.மண்டப்பாறை

16.மேல்மரத்தூர்
17.ஒடமங்கலம்

18.பெருமலை

19.குட்டியூர் பள்ளம்
20.பாலாண்டகொல்லை கொட்டாய்
21.கீழ்விளாங்குப்பம்

22. புதுப்பட்டு

22. தீத்தனார் தும்பகொல்லை
23. வள்ளிதாதன் கொட்டாய்
24. வாழத்தும்பை

25. விளாங்குப்பம்
26. காட்டூக்கொல்லை

3. தென்மலை அத்திப்பட்டு நாடு

1.தென்மலை அத்திப்பட்டு

2.சின்னகீழ்ப்பட்டு
3.மேல்பட்டு

4.பெரியகீழ்ப்பட்டு

4 பலாமரத்தூர் நாடு

1.நாச்சமலை

2.ஒண்டிக்குரையனூர்
3.புளிச்சகுட்டை

4.தோப்பூர்கொல்லை கொட்டாய்

5.சின்னக்குட்டை

6.குண்டுரெட்டி
7.குறியானூர்

8.மந்தக்கட்டு கொல்லை
9.நல்லப்பட்டு

10.நார்த்தமரத்தூர்
11.ரெட்டிக்கொல்லை

12.திமிரிமரத்தூர்
13.தோப்பூர்

14.வாழக்காவூர்

15.சேராமரத்துர்

16.கல்யாணமந்தை

17.பலாமரத்தூர்

18.வாழக்காடு


5. நம்மியம்பட்டு நாடு

1. கோவிலூர் ஆண்டிக் கொட்டாய்
2. கும்பலூர் கொல்லை மேடு

3. குப்பலூர்
4. கனிகிணத்தூர்

5. மேல் கோவிலூர்
6. முட்டுநத்தூர் ஊரன் கொல்லை மேடு
7. நாதனூர் பாலாண்டி கொல்லை மேடு
8. வள்ளியூர் சடையாண்டி கொட்டாய்
9. வெள்ளையான் கோட்டை
10 நாடாலூர் சடையன் வீடு
11. பூத்தூர் ரவுரான் கொல்லைமேடு
12. சோலை கொல்லைவெளி

13. செம்மண் கொல்லை

14. புலி கென்றான்கொல்லை கொட்டாய்

15. வண்டிகாரன் வீடு

16. வங்களா கொல்லை

17. கீழ்குப்பசானவூர்
18 கீழ்சரணங்குப்பம்

19. கோவிலாண்டுர்
20. மேல் நம்மியம்பட்டு

21. பட்டுலூர்
22. சின்னசேராமரத்தூர்

23. சினையிரப்பட்டு
24. ஏரியூர்

25. கீழ் கோவிலூர்

26 கீழ் நாடனூர்
27. கோரமடுவு

28. மேல்நாடலூர்

29. முதலை மடுவு

30. தடுப்பட்டு

31. நடுசாரன்குப்பம்
32. பாடானூர்

33. பட்டரயன்குடிசை
34. பெரியவீரப்பட்டு

35. தாசரிபுதூர்
36. போரத்துக்கொல்லை

37. சின்னமச்சூர்
38. ஜோனூர்

39. கல்லாத்துவீடு கொட்டாய்
40. காவிதிகுடிசை

41. கட்டயன்குடிசை
42. கோனேரிகுடிசை

43. கும்பலூர்

44. மச்சூர்
45. மேல்குப்பானச்சனூர்
46. மேல்சாரணங்குப்பம்

47. நாச்சமலை
48. நம்மியம்பட்டு

49.புலிகொன்றான்வெளி
50.புத்தூர்

51.தாதன்குப்பம்

52.வெள்ளியூர்

53. முட்டுநத்தூர்

54.பழையபுதூர்

55.பனைமரத்தூர்

56.ஆலமரத்து கோட்டை

57. சின்னத் தாதன் குப்பம்


6.மேல்சிலம்பாடி நாடு

1. சின்ன மோட்டூர்

2. விலாமரத்தூர்
3. விளிச்சாலூர்

4.ஏலத்தப்புதூர்
5. கீழ் சிலம்பாடி

6. மேல்கூட்டாத்தூர்
7. மேலூர்

8. ஓடன்கொல்லை

9. பலாக்கானூர் கொல்லை கொட்டம்

10. பாதிரி
11. மேல்சிலம்பாடி

12. மோளையானூர்
13. மோட்டுக் கொல்லை

14. படபஞ்சமரத்தூர்
15. ஆத்துக்கானூர்

16. கீழ் விளாமூச்சி
17. கூத்தனேரி

18. கூட்டாத்தூர்
19.மேல் விளாமூச்சி

20. மோட்டூர்
21. வண்ணாங்குட்டை

22. எம்.ஜி.ஆர் நகர்
23. மந்தை வெளி கொட்டாய்
24. சின்னகூத்தனேறி

25 சின்னசிலம்பாடி
26.பலாக்கானூர்

7.கோவிலூர் நாடு


8) குட்டக்கரை நாடு

1. பாதிரி

2 பட்டரைக்காடு

3. தும்பக்காடு
4. தும்பக்காடு கீழூர்

5. தும்பக்காடு நடுவூர்
6. கீழ்பெரியவள்ளி

7. கொள்ளேரி(கல்லேரி)
8 கொண்டிக்கானூர்

9. மஞ்சூத்து
10. மேல்சின்னகண்ணுகொல்லை
11. மேல்சேப்பளி
12.மேல் பொன்ரகம்கொல்லை
13. பட்டன்கோவிலூர்

14.புதூர்
15. தனியார்கொல்லைமேடு
16. வைதியன்கொல்லை

17. குட்டக்கரை
18. கீழ்ச்சேப்பளி

19. மேல்பெரியவள்ளி
20. அமட்டன்கொல்லை

21. சிங்காடு
22. அமட்டன்கொல்லைமேலூர்


9) காணமலை நாடு 

கணமலை என்னும் ஊரில் தான் ஜவ்வாது மலை பெரிய பட்டகாரன்( ராஜா) வசிக்கிறார்.

1.பதி மலை

2. காணமலை
3. மேல்முருங்கைமந்தை

4. சீங்காடு
5. தஞ்சன் பாறை

6.முத்தாண்டி குடிசை
7.வேடகொல்லைமேடு

8.இருளம்பாறை
9.இவந்தம்பட்டு

10.கீழ்முருங்கைமந்தை
11.மல்லிமேடு

12.மேல்கணவாயூர்
13.பாலபிரியம்பட்டு

14.பொங்களூர்
15.அரசனூர்

16.ஆவார வலசை
17.காவம்பட்டு

18.கீழ்கணவாயூர்
19.மலைகொல்லை

20.மேல்புளியங்குப்பம்
21சென்பகத்தோப்பு

22.நீர்தும்பை
23.கல்லாத்தூர்

24.நாகலூர்
25.நீப்பளாம்பட்டு

26.நெல்மந்தை
27.பாவமதி

28.பள்ளத்தூர்
29.புளியாங்குப்பம்

30.சாந்தம்பட்டு
31.கீழ்சென்பகத்தோப்பு

10.கல்லாத்தூர் நாடு

1.துரிஞ்சிக்குப்பம்

2.மோட்டூர்
3.கிளையூர்

4.தீத்தாண்டபட்டி வலசை(செங்கம் வட்டம்)

(திருப்பத்தூர் வட்டம்)

11. நெல்லிவாசல் நாடு

1.வலசை

2. நெல்லிவாசல் நாடு
3. மலைதிருப்பத்தூர்

4. மலையாண்டிப்பட்டி
5. மேல்பட்டு

6. நெல்லிப்பட்டு
7. புலியூர்

8. சேம்பரை

12.புதூர் நாடு

1. சித்தூர்

2. கீழூர்

3. மொழலை
4. விளாங்குப்பம்

5. நடுகுப்பம்
6. வழுதலம்பட்டு

7. புதூர்நாடு
8. அரும்பட்டு

9. கோம்பை

10. மேலூர்

13.புங்கம்பட்டு நாடு

1. பேளூர்

2. வசந்தபுரம்
3. அரசமரத்துகொல்லை

4. பழைய பாளையம்

5. ரங்கசமுத்திரம்
6.கொத்தனூர்

7.பெருமாள் கோயில் வட்டம்
8. தகரகுப்பம்

9. பெரும்பள்ளி
10. சேர்கலூர்

11. சின்னவட்டானூர்
12. கல்லாவூர்

13.கீழானூர் 

14.கம்புகுடி
15. குடகுமலை

16. நடுவூர்

14.குரும்பேரி நாடு

1. மாம்பாக்கம்
(வேலூர் மாவட்டம்)
2. அணைக்கட்டு

15.பீஞ்சமந்தை நாடு

1. முத்தனூர்

2. நெல்லிமரத்துக் கொல்லை
3. நாய்க்கனுர்

4. பீஞ்சமந்தை
5. நச்சிமடுவு

6. பளமரத்துகொல்லை
7. பழந்தூர்

8. அதிமரத்துக் கொல்லை
9. கீழ் பிஞ்சமந்தை

10. ஏரிக்கொல்லை
11. அவுசரி ஓடை

12. பங்களா கொல்லை
13. கருப்பன்கொல்லை
14. முதியன்கொட்டாய்

15. பொதிபாறை
16. சடையன் கொல்லை
17. பெரியகொட்டன்செட்டி
18. பெரியதட்டான்குட்டை
19. பெரியபளப்பாறை,
20. பிள்ளையார்குட்டை
21. பொதிப்பாறை கொல்லை

22. புதூர்
23. புலியமரத்தூர்

24. சட்டதூர்
25. தேக்குமரத்தூர்

26. தெத்தூர்
27. தொங்குமலை

28. என். பழந்தூர்
29. புதுகுப்பம்

30. அல்லேரி

31. காவலியூர்
32. கொரத்துர்

33. குனக்கலூர்
34. மூலனூர்

35. முகுதவல்லிமேடு
36.பெரிய எட்டிப்பட்டு

37.செங்காடு
38.ஆட்டுகாரன்துரை

39. சின்ன எட்டுபட்டு
40 சின்னகுட்டன்செட்டி,
41. சின்னபனப்பாறை

42. எள்ளுபாறை
43. குடிகம்

44. காட்டியம்பட்டி
45. கீழ்குப்புசூர்

46. முள்ளுவாடி
47. கோனுர்

48. குப்புசூர்

16. ஜார்தன் கொல்லை நாடு

1. பெரிய கனிசை

2.பூசன மலச்சி
3.சின்னதாட்டான்குட்டை
4.காணிசைப்புத்தூர்
5.ஜார்தன்கொல்லை
6.இலந்தம்புதூர்

7. குண்டுராணி
8. பட்டிகுடிசை
9. கடுக்கமரத்துக் கொல்லை
10. சின்ன சுவிசி

11. தோனியூர்
12.முத்தன்குடிசை
13. சளதுகொல்லை

14.எரிமேடு
15. இளயனிமரத்தூர்


17. பாலம்பாட்டு நாடு

1.அரச மரத்தூர்

2. சின்னூர்

3. கொலையனூர்
4. குறனூர்

5. நெக்கினி
6. பட்டிகொல்ல

7. பாலம்பாட்டு
8. தானிமரத்தூர்


18.அத்தியூர் நாடு

1. குருமலை

2. வெல்லக்கல் மலை
3. நச்சிமேடு

4. அனிமலை
5. தெள்ளை (கணியம்பாடி ஒன்றியம், சோழவரம் ஊராட்சி)

வியாழன், 14 மே, 2026

ஜவ்வாது மலை,கோவிலூர் நடுகல் மற்றும் கல்வெட்டுகள்

ஜவ்வாது மலை,கோவிலூர் நடுகல் மற்றும் கல்வெட்டுகள்

சோழர் கல்வெட்டு:

கோவிலூரில் உள்ள திருமூலநாதர் கோயிலின் கருவறையின் தெற்கு பக்கத்தில் முப்பட்டைக் குமுதத்தில் 

*வீர ராஜேந்திர சோழனின் 3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் ‘கங்க குறுநில மன்னன் பிரிதிவி கங்கன் அரசகங்கள் நாயன் வருகிறான்’ 
என குறிப்பிடப்பட்டுள்ளது. 

*மூன்றாம் இராஜராஜ சோழனின் 29-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில்
 ‘பிருதிவி கங்கன் கூத்தாடுந்தேவன்’ என்பவரின் பெயர் உள்ளது.

(இந்தக் கல்வெட்டில் திருமூலநாதர் கோயிலுக்கு எதிரில் ஒரு குளம் வெட்டிய தகவலும் பெரிய ஏரிக்கு தும்பு அமைத்துள்ள தகவலும் உள்ளது.)

(கருவறையின் தெற்கு சுவரில் விஜய நகர மன்னரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.)

(திருமூலநாதர் கோயிலுக்குரிய இரண்டு லிங்கங்கள், பிள்ளையார், திருமால், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் கற் சிலைகள் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.)

பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒரு நடுகல் திருமூலநாதர் கோயில் வளாகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

கல்செக்கு கல்வெட்டு:

9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “பரதன் காரிதன் மகன் வென்றிட்டிட வாட்டி மோடி செக்கு"

என பொறிக்கப்பட்டுள்ளது. 

இந்த செக்கின் கல்வெட்டு தவிர மற்ற பகுதி கழனியில் புதைந்துள்ளது. இந்த செக்கின் விட்டம் 75 செ.மீ. 

இந்த நிலத்திற்கு தெற்கில் மேட்டில் வெங்கடேசன் என்பவரது நிலத்தில் இரண்டு கல் செக்குகள் காணப்படுகின்றன.

ஒரு செக்கில் “பரதன் காரிதன் மகன் (வெ)ன்றிட்டிட செக்கு” என்றுள்ளது. 

இந்த செக்கின் விட்டம் 1 மீட்டர் 20 சென்டி மீட்டர். அதே நிலத்தில் வேறு கல் செக்கும் மேற்படி கொடையாளி அளித்திருக்கிறார். இந்தச் செக்கின் விட்டம் 1மீட்டர். 

செக்குகள் செய்த காலத்தில் அதிக அளவில் இலுப்பை மரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆமணக்கு அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும். இவற்றின் விதைகளை செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுத்து வீட்டுக்கு பயன்படுத்தி கோயிலுக்கும் விளக்கேற்றியிருக்க வேண்டும். தற்காலத்தில் இலுப்பை மரங்கள் இல்லை என்பதுடன் ஆமணக்கு பயிரிடுவதும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

புலி குத்திப்பட்டான் நடுகல்: 

திருமூலநாதர் கோயில் கோபுரத்துக்கு வடகிழக்கு பக்கத்தில் ஒரு புலிக்குத்தி நடுகல் உள்ளது. 

“மங்கல பரிதந் மூலகத்துக்கு மகன் வில்லி புலி குத்திப் பட்டான்” 
என்ற கல்வெட்டும் உள்ளது. 

இந்த புலிக்குத்திக் கல், 10-ம் நூற்றாண்டுக்குரியது. 

கங்க மன்னன் பெயர் கல்வெட்டு:

கோவிலூர் ஊருக்கு நுழையும் முன்பாக சாலை ஓரத்தில் வேலியில் மறைந்துள்ள ஒரு அரசனின் சிற்பம் நிற்கிறது. 

அதில், “கலிதாநம் தந்தான் அழகிய கங்க நாடாழ்வான்” என்று கல்வெட்டுள்ளது.

இவர், ஒரு கங்க குறுநில அரசராவார். இந்தச் சிற்பம் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 


நன்றி:

இந்து தமிழ் நாளிதழ்,
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் வேலூர் அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற காப்பாட்சியர் ம.காந்தி, 
பொருளாளர் முனைவர் ப.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை தொல்லியல் ஆலோசகர் பொறியாளர் மணி.

ஜவ்வாது மலை கோட்டூர் கொல்லை பகவதி கல்வெட்டு

ஜவ்வாது மலை,கோட்டூர் கொல்லை பகவதி கல்வெட்டு

ஜவ்வாது மலை அடுத்த கோட்டூர் கொல்லை கிராமத்தில் உள்ள சிறிய கோயிலில் பகவதி(கொற்றவை) சிலையும், அதன் அருகே சோழர் கால கல்வெட்டு இருந்தது. 

13 வரிகளை கொண்ட கல்வெட்டு 3 அடி உயரம் கொண்டது.

கல்வெட்டு செய்தி:

"11-ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் எட்டாம் ஆட்சியாண்டில் (கி.பி.1078),நெல்வாடை மாதன் சித்திரமேழி, போடன் நக்கன், மாறன் மாதன், பன்றன் ஆகிய நால்வரும்,பகவதி சிலையை செய்து வழங்கியுள்ளனர்".

பகவதி என கல்வெட்டில் குறிப் பிடப்பட்டிருந்தாலும், எருமை தலை மீது நிற்கும் துர்க்கையும் (கொற்றவை), கைகளில் சங்கு சக்கரம் கொண்டு அமைந்துள்ளது. கொற்றவையை பகவதி எனும் பெயரில் வழிபடப்படுகிறது என்பது  இது ஒரு சான்றாகும். 

நெல்வாடை மாதன் சித்திரமேழி என்பது நெல்லில் இருந்து வரும் வாசம் என்ற பொருளில் அமைந்த புதுமையான பெயராகும்.

சித்திரமேழி என்பது வேளாண் பெருமக்கள் குழு என அறியப்படுகிறது.

நக்கன் என்பது சோழர் காலத்தில் கல்வெட்டுகளில் அதிகம் புழங்கி வரும் சிவன் கடவுளுக்குரிய சொல்லாகும். 

மாறன் என்பது பாண்டியர்களின் பட்ட பெயராக வரும் சொல்லாகும். 

பன்றன் என்ற பெயரின் தொடர்ச்சி கல்வெட்டில் கிடைக்கவில்லை. 

நன்றி:

இந்து தமிழ் நாளிதழ்,
பாலமுருகன் ஐயா,
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்.

ஜவ்வாது மலை,மொழலை சிவன் கோவில் கல்வெட்டு



ஜவ்வாது மலை,புதூர் நாடு,மொழலை சிவாலய கல்வெட்டுகள்

இக்கல்வெட்டுகள் சோழர், விஜய நகர மன்னர்களை பற்றியச் செய்திகளை பதிவு செய்கின்றன. கோவிலின் இடது பக்கத்தில் நான்கு கல்வெட்டுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. 

முதல் கல்வெட்டு :

கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர காலத்து மன்னன் கம்பண்ணனை பற்றி பதிவு உள்ளது. இவரை, மகாமண்டலேஸ்வரன் என்றும் கம்பண்ண உடையார் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது.ஆடையூர் நாட்டில் நவிரமலை (ஜவ்வாதுமலை) இருந்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது.


இரண்டாவது கல்வெட்டு: 

"ஆடையூர் நாட்டில் நவிரமலை நாடு இருந்ததைக் கூறுகிறது. 
நாங்கள் சொல்லும் வரியை மட்டுமே, நவிரமலை (ஜவ்வாது மலை) மக்களிடம் இருந்து ஆடையூர் நாடாழ்வான் பெற வேண்டும். மீறி அதிகமான வரியை நவிரமலை மக்களிடம் இருந்து பெற்றால், நாடாழ்வான் என்னும் பட்டம் அம்மன்னனுக்குக் கிடையாது"

என்ற கருத்தை முன்வைக்கிறது. எனவே சோழர் காலத்தில் வரியை முறைப்படுத்தும் ஒரு கல்வெட்டாக இது உள்ளது.

(ஆடையூர் என்பது திருவண்ணாமலைக்கு அருகே உள்ள ஒரு ஊராகும். அவ்வூரை தலைமையிடமாகக் கொண்டு ஆடையூர் நாடாழ்வான் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் புதூர்நாடு பகுதியை ஆட்சி செய்துள்ளார். ஆடையூர் நாடாழ்வானுக்கும் மேலே ஒரு அரசு இருந்திருக்கிறது.அது சோழ அரசாக இருக்கலாம்)


மூன்றாவது கல்வெட்டு:

இது சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டாகும். 
"குலோத்துங்கனின் 41-ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதில் நிகரிலி சோழ மண்டலத்தில் உள்ள நவிரமலை(ஜவ்வாது மலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இக்கல்வெட்டு சிவன் கோவிலுக்குத் தானம் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறது".

(கங்கர்களிடம் இருந்து ராஜராஜசோழன் இப்பகுதிகளை கைப்பற்றி உள்ளான். நிகரிலி என்பது ராஜராஜனுக்கு யாரும் நிகர் இல்லாதவர்கள் என்ற பொருளில் இம்மண்டலத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.நிகரிலி சோழமண்டலம் என்பது தர்மபுரி, கர்நாடகப் பகுதிகளில் உள்ள பெங்களூரு, கோலார், தும்கூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். சில கல்வெட்டுகள் ஜவ்வாதுமலை ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. இங்கு நிகரிலி சோழ மண்டலம், தகடூர் (தர்மபுரி) நாட்டை குறிப்பிடுவதால் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர் நாட்டுப் பகுதி ஆடையூர் நாட்டிலும், தகடூர் நாட்டிலும் இடம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.)

நான்காவது கல்வெட்டு:

"ஆடையூர் நாட்டில் உள்ள நவிரமலை நாட்டில் வேளாண்மைச் செய்யும் பொருட்டு கூலி ஆளுக்கு 5 தர வேண்டும்". 

அது பணமா, நெல் அளவா என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. இதன் மூலம் இம்மலை மக்களின் வேளாண் வாழ்வியல் பற்றிய குறிப்புகளை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

நன்றி:

தினத்தந்தி நாளிதழ்,
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, 
காணி நிலம் மு.முனிசாமி

ஜவ்வாது மலை தாலூர்,எருக்கம்பட்டு மற்றும் பாடானூர் கல்வெட்டு

ஜவ்வாது மலை தாலூர்,எருக்கம்பட்டு மற்றும் பாடானூர் கல்வெட்டு

ஜவ்வாதுமலையில் தாலூர் கிராமத்தில் இரண்டு விஜயநகர கால கல்வெட்டுகளும், எருக்கம்பட்டு கிராமத்தில் ஒரு பல்லவர் கால நடுகல் கல்வெட்டும் பாடானூரில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டன. 

கல்வெட்டு 1:
ஜவ்வாதுமலை தாலூர் கிராமத்தில் நிலத்தில் உள்ள பலகைக்கல்லில் உள்ள விஜயநகர கால கல்வெட்டு கிருஷ்ண தேவமகாராயர் காலத்தியதாகும். 

"கிருஷ்ண தேவமகாராயரின் காரியத்து கடவரான மனுகம நாயக்கர் அதியன் வரதன் என்பவர் தென்மலையாள நாட்டு செவபுரம் வெள்ளை கவுண்டனுக்கும், மலிய கவுண்டனுக்கும், மாறமுண்டன் கவுண்னுக்கும் கல்ஏரி நாட்டவர்க்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது".


கல்வெட்டு 2:

கல்வெட்டு ஒரு பக்கம் மட்டுமே கிடைக்கிறது. அதில்

 "கோட்டுத்தலைப்பற்று நாட்டுக்கும் தேவர் தந்த திருமுகப்படிக்கும் நான் தந்த ஓலைப்படியும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் அவ்வனார்க்குடிக்கு நாலு பணமும் பருவருக்கு இரண்டு பணமும் கொடுக்க வேண்டியது என்றும் அந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது".

அவ்வானார் குடி என்பதற்கு பொருள் விளங்கவில்லை.பருவர் என்பது பருவத மலை சிவன் கடவுளை குறிக்கும்.

இதில் அவ்வூரில் அப்போது நடைபெற்ற ஒரு ஒப்பந்தம் தொடர்பான கல்வெட்டுகள் ஆகும். 

கல்வெட்டு 3:

எருக்கம்பட்டு கிராமத்தில் கிடைக்கப்பெற்ற நடுகல் கல்வெட்டில் வீரன் வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் ஏந்தியவாறு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளதை காட்டுகிறது. இந்த சிற்பத்தின் மேற்பகுதியிலும் வலப்புறத்திலும் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. 

இதில் மேற்பகுதியில் கோவிசைய என்ற வார்த்தையும் வலதுபுறத்தில் சிதைந்த நிலையில் எழுத்துக்களும் காணப்படுகின்றன

இதன் சிற்ப அமைப்பைக் கொண்டு இதன் காலத்தை பிற்கால பல்லவர்கள் காலத்தைச் சார்ந்ததாக கருதலாம்.

கல்வெட்டு 4:

 நம்மியம்பட்டு அடுத்த பாடானூர் கிராமத்தில் ஊருக்கு வெளிப்புறமாக கிழக்கு நோக்கிய நடுகல்லில் வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் கொண்டு வீரன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் மேற்பகுதியில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

"ஸ்ரீமலைய …. தூர் ஆள மங்கலமுடைய தூலூர் எறிந்து பட்டான் எற்கருமான்"

 என்று சிதைந்த நிலையில் கல்வெட்டு உள்ளது.

விளக்கம்:

 இதன்படி "ஶ்ரீ மலைய" என்று வருவதால் மலையன் பெயருடைய ஆடையூர் நாடாழ்வான் என்ற ஒருவர் ஆட்சியில்,ஜவ்வாதுமலையை சார்ந்த மங்கலமுடைய தூலுர் என்ற ஊரை ஆண்டு வந்த எற்கருமான் என்பவர் பூசலில் சண்டையிட்டு இறந்து போயுள்ளார்.

 இவரின் நினைவாக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது. ஊர் மக்கள் இந்த நடுகல்லை பட்டான் சாமி என்று வணங்கி வருகின்றனர். பட்டான் சாமி என்பது இறந்தவர் நினைவாக வைக்கப்பட்ட கடவுள் என்ற பொருளில் அவ்வூர் மக்கள் வணங்கி வருகின்றனர். 

நன்றி

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச. பாலமுருகன், சி. பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா, நந்தகுமார் ஆகியோர்கள்.

ஜவ்வாது மலை செப்பு தகடு


தினமணி
முகப்பு

திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 16-ஆம் நூற்றாண்டு செப்புத் தகடுகள் கண்டெடுப்பு
திருப்பத்தூா் அருகே கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜய நகர ஆட்சிக் கால செப்புத் தகடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

DIN
Updated On : 21 பிப்ரவரி 2023, 1:30 am IST
பகிர்:
திருப்பத்தூா் அருகே கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜய நகர ஆட்சிக் கால செப்புத் தகடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான சேகா், ஆய்வு மாணவா் சே.ஹரிஷ் ஆகியோா் ஜவ்வாது மலைக் கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மணிகண்டன் அளித்த தகவலின் பேரில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜய நகர ஆட்சிக் கால செப்புத் தகடுகளைக் கண்டறிந்தனா்.

Advertisement


இதுகுறித்து தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் ஆ.பிரபு கூறியது:

ஜவ்வாது மலை, தீா்த்தனூா் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி என்பவரிடம் பழைமையான செப்புத் தகடுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்று ஆய்வு செய்தோம். அவரிடம் 5 செப்புத் தகடுகள் இருந்தன. அவை விஜய நகரப் பேரரசின் அதிகாரபூா்வமான முத்திரையான பன்றி உருவம், வாள், சூரியனுடன் கூடிய வளையத்தில் கோா்வையாக உள்ளன.

செப்புத் தகடுகளின் இரு பக்கமும் (5 செப்புத் தகடுகளில் 10 பக்கங்கள்) எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தகடும் 21.5 செ.மீ. நீளமும், 16 செ.மீ. அகலமும், 500 கிராம் எடையும் உள்ளது. இந்தச் செப்புத் தகடுகள் ‘நந்திநாகரி’ என்ற எழுத்து வடிவத்திலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன.


செப்புத் தகடுகளில் உள்ள செய்திகளைத் தமிழகத்தின் முதுபெரும் கல்வெட்டு அறிஞரான ராஜகோபாலின் முயற்சியால், மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநா் முனிரத்தினம் என்பவரால் படிக்கப்பட்டது.

இதில், 16-ஆம் நூற்றாண்டை சோ்ந்த விஜய நகரப் பேரரசின் யதிராஜன் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க ‘ஆரவீடு மரபு’ வழி வந்த வேங்கடபதி ராயா் என்ற மன்னா் ஒரு கிராமத்தை ‘சீதா ராமபுரம்’ எனப் பெயரிட்டு நான்கு வேதங்களை அறிந்த பல பிராமணா்களுக்கு தானமாக வழங்கிய செய்தியும், பல்வேறு கோத்திரங்கள் அடங்கிய பட்டியலையும், மந்திர விளக்கங்களையும் விவரிக்கின்றன.

‘சீதா ராமபுரம்’ என்பது ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டத்தில் உள்ள ஓா் ஊராகும். இந்தச் செப்புத் தகடுகள் குறிப்பிடும் ஊா் இதுவாகத்தான் இருக்க வாய்ப்புள்ளது.


இந்தச் செப்புப் பட்டயங்களை 4 தலைமுறையாகப் பாதுகாத்து வரும் குப்புசாமி குடும்பத்தாருக்கு எப்படிக் கிடைத்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடா் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.




புதன், 13 மே, 2026

ஜவ்வாது மலை,சின்னாண்டி கவுண்டர் நாட்டார் ஆவணம்

ஜவ்வாது மலை,அத்திப்பட்டு நாட்டார் ஓலை ஆவணம்


இடம் : 
வேலூர் மாவட்டம், 
ஜவ்வாது மலை,
ஜமுனாமரத்தூருக்கு அருகில் அத்திப்பட்டு என்னும் ஊரில் வசிக்கும் கோவிந்தன் நாட்டார் என்பவரிடம் உள்ள ஓலைச் சுவடி.

ஆண்டு - கி.பி 1870

ஜவ்வாது மலையில் காராளர்(மலையாளி) என்னும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த கார்காத்த வெள்ளாளர்(காரைக்காட்டு வெள்ளாளர்) ஆவர்.இவர்கள் தங்களை பூபாள முதலி என்றும் அழைத்துக்கொள்கிறார்கள்.

இந்த ஜவ்வாது மலையில் உள்ள மக்களுக்கு அந்த மலையின் பெரியமலை(காண மலை) நாட்டு பட்டக்காரர்,தலைமை பட்டக்காரர் அல்லது ராஜா ஆவார்.இந்த ராஜா தலைமையில் ஏற்ப்பட்ட நாட்டார் பதவி பற்றிய ஆவணம் இது.

செய்தி:

ஜவ்வாது மலையில் எழுபது மலைக்குப் பெரிய மலை நாட்டாராகிய ஆண்டிக்கவுண்டன் குமாரனாகிய சின்னாண்டி கவுண்டன் நாட்டார் முன்பாக, நடுபத்து நாட்டுக்கு எது(ஜ)மானனாகிய அருணாசலகவுண்டன் பேரனாகிய ஆண்டிக் கவுண்டனுக்கு எழுதிக்கொடுத்த 13 கிராமங்கள் பற்றியது.

ஓலை ஆவணம் முன் பக்கம்:

1. பிறமாதூத வரு ஆவணி மீ 21 எழுபத்துமலைக்கி பெரியமலை நாட்டாராகிய ஆண்டி கவுண்டன் குமார நாகிய.

2. சின்னாண்டி கவுண்டன் நாட்டார் முன்பாக நடுபத்து நாட்டுக்கு எது மானனாகிய அருணாசலகவுண்டன் பேரனாகிய ஆண்டிக்.

3. கவுண்டனுக்கு எழுதிக் குடுத்த கிராமங்கள் விபரம் கல்லியாண மந்தை - 1, யெலாமரத்தூர் 2 சின்னவ்வர் குட்டை 3. குறி

4. யானுறு 4, தெத்தூறு 5, அத்திப்பட்டு 6, பொன்னா நெல்லிமரத்தூர் - 7. ... மாட்டுக்கானூறு 9, கும்புபெலா.

5. மரத்தூறு 10, ஆட்டியானூறு 11. புள்ளிச்சை குட்டை 12, நல்லா ...மங்களம் 13 பதிமூன்றும் ஒனக்கு

ஓலை ஆவணம் பின்பக்கம்:

6. சேர்ந்தபடியால் நீயே அனுபவித்து கொள்ளவும் மேலும் சேலம் ப ப்ப கவுண்டனுக்கு யாதொறு பாத்தியமும்

7. மில்லை யிந்த படிக்கி யென்ங்கள் றாசியில் எழுதி குடுத்த கிறாமங்கள் விபரம், யிதர்க்கு சாஷச்சியகேஅரள்ளி கவுண்டன்.

8. மகன் அறுணாசல கவுண்டன் அறுவேன் பழங்கோட்டை நாடு நாட்டான் கட்டிய கவுண்டன் மகன் வெள்ளைய கவுண்டன் அறுவேன் பள்ளப்ப நாடு

9. பெலாம பட்டு காடைய கவுண்டன் தட்டான் நடுல்ல கவுண்டர் அறுவேன். எழுதி நல்மைக்கி காஞ்சிபுரம் அருணாசல முதலியார் சோறுத்

10. தலகிதம் யிதக்கு யாராவது விற்பன்னம் செயிதால் காராவை கொன்ன பாவத்தில் போக வேண்டியது சுப மஸ்த்து.

விளக்கம்:

பிறமாதூத வருடம் ஆவணி  21 ஆம் தேதி, எழுபத்துமலைக்கு பெரியமலை நாட்டாராகிய ஆண்டி கவுண்டன் குமாரனாகிய சின்னாண்டி கவுண்டன் நாட்டார் முன்பாக நடுபத்து நாட்டுக்கு  நாட்டாரக (எஜமானனாக) இருக்கும் அருணாசலகவுண்டன் பேரனாகிய ஆண்டிக்கவுண்டனுக்கு எழுதிக் குடுத்த கிராமங்கள் விபரம்,

கல்லியாண மந்தை - 1, 
எலாமரத்தூர் 2,
சின்னவ்வர் குட்டை 3,
குறியானூர் 4, 
தெத்தூறு 5, 
அத்திப்பட்டு 6, 
பொன்னா நெல்லிமரத்தூர் - 7,
. ......... 8,
மாட்டுக்கானூர் 9,
கும்புபெலாமரத்தூர் 10, 
ஆட்டியானூறு 11. 
புள்ளிச்சை குட்டை 12, 
நல்லா ...மங்களம் 13 

இந்த பதிமூன்றும் ஊரும் உனக்கு 
சேர்ந்தபடியால் நீயே அனுபவித்து ஆண்டு  கொள்ளலாம்,மேலும் இதற்கும் சேலம் ப.......... ப்ப கவுண்டனுக்கு யாதொறு உரிமையும்(பாத்தியமும்) இல்லை.

(இந்த ஆண்டி கவுண்டரின் உடன் பிறந்தவரோ அல்லது பங்காளியோ சேலம் பகுதியில் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.இந்த சேலம் பகுதியில் உள்ள ப....ப்பா கவுண்டன் உரிமைக்கு வர கூடாது என்று முடிவு செய்துள்ளார்கள்)

இதன்படிக்கு(மேற்குறிப்பிடப்பட்ட ஊர்கள்) எங்கள் இராச்சியத்தில் எழுதி குடுத்த கிராமங்கள் விபரம் ஆகும்.

இதற்கு  சாட்சியானவர்கள்:
1.அரள்ளி கவுண்டன் மகன் அருணாசல கவுண்டன் அறிவேன் 
2.பழங்கோட்டை நாடு நாட்டான் கட்டிய கவுண்டன் மகன் வெள்ளைய கவுண்டன் அறிவேன்
3.பள்ளப்ப நாடு பெலாம பட்டு காடைய கவுண்டன் 
4.தட்டான் நடுல்ல கவுண்டர் அறிவேன்.

(தட்டான் என்ற சொல் இரும்பு சம்பந்தப்பட்ட வேளாண் கருவிகளான ஏர் கலப்பை,மண்வெட்டி,களை வெட்டி, கொடுவாள் மற்றும் அருவாள் போன்ற கருவிகள் செய்யும் கொல்லரை குறிக்கும் சொல்லாக இருக்கலாம்.இம்மலை மக்கள் விவசாயம் முதல் மற்ற எல்லா தொழில்களும் கற்ற மக்கள் ஆவர்.எனவே இரும்பு கருவிகள் செய்யும் கொல்லராக பொருள் கொள்ளலாம்)

இந்த ஆவணத்தை எழுதியவர் காஞ்சிபுரம் அருணாசல முதலியார் ஆவார்.

சோறுத்தலகிதம் இதற்கு யாராவது கேடு (விற்பன்னம்) செய்தால் காராம் பசுவை கொன்ற பாவத்தில் போக வேண்டியர் ஆவர்.

நன்றி - ஆவணம் இதழ் 16,பக்கம் 79

ஜவ்வாது மலை,புங்கம்பட்டு நாடு,சோழர் கால கல்வெட்டு

ஜவ்வாது மலை,வேளாண் கூத்தன் கரையன் கல்வெட்டு

இடம்
மாரியம்மன் கோவில்,
கல்லாவூர் கிராமம்,
புங்கம்பட்டு நாடு,
ஜவ்வாது மலை.


கல்வெட்டுக் கல் நீளவாக்கில் இரண்டாக உடைந்துள்ளது. பெரும்பள்ளியில் உள்ள ஈசனுக்கு கரைகண்டீஸ்வரா் என்று இந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.

இக்கல்வெட்டு தூபகலசம், திரிசூலம், குத்துவிளக்கு ஆகிய மங்கலப் பொருள்களின் உருவத்துடன் தொடங்குகிறது. 

கல்வெட்டு விளக்கம்

ஸ்வஸ்தீஸ்ரீ திரிபுவன சக்கரவா்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு 22-ஆவது ஆட்சி ஆண்டில்(13 ஆம் நூற்றாண்டு), பெரும்பள்ளி ஊருடைய வேளாண் கூத்தன் கரையன் என்பவா் ‘முக்கண்ண’ என்கிற ஏரியை உருவாக்குகிறாா். (இன்றைக்குப் பெரும்பள்ளியில் இந்த ஏரி அண்ணாமலை ஏரி என்று பெயா் மாற்றம் பெற்று வழங்கப்படுகிறது.)


ஜவ்வாதுமலை பெரும்பள்ளியில் உள்ள கரைகண்டீஸ்வரருக்குத் தளிகை (உணவு) படைப்பதற்காக 4 கலம் நெல்லும், ஏரியின் வடக்குப் பகுதியின் கீழ்ப்பக்கம் உள்ள புஞ்சை நிலத்தைத் தானமாகத் தருகிறாா். ஆட்டுப் பாறைக்கு வடக்கும், ஏரிக்கல்லு நெடுகல்லு வடக்கும், கடை கழனிக்குக் கிழக்கும் வடபாறை இதற்கு கிழக்கும் உள்ள இடத்தை சூரிய, சந்திரன் உள்ளவரை தானமாக அளித்தேன்.

என்று கூத்தன் கரையனின் கல்வெட்டு கூறுகிறது.

வேளாண் கூத்தன் கரையன் - இவர் ஜவ்வாது மலையில் உள்ள பெரும்பள்ளி ஊரை சார்ந்தவர்.வேளாண் என்று வருவதால் இவர் மலையில் வாழும் காராளர் குடியில் பிறந்த பெரு நிழக்கிழாராக இருந்தல் வேண்டும்.

முக்கண்ண - மூன்று கண்ணுடைய சிவன்

நன்றி
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசியா் க.மோகன்காந்தி, 
தொல்லியல் அறிஞா் பெ.வெங்கடேசன், காணி நிலம் மு.முனிசாமி


வெள்ளி, 8 மே, 2026

சேம்பரை கிராமம் கல்வெட்டு,ஜவ்வாது மலை.

ஜவ்வாது மலை,சேம்பரை சோழர் கல்வெட்டு

இடம்
சேம்பரை கிராமம்,
புதூர் நாடு,
ஜவ்வாது மலை

கல்வெட்டு

கல்வெட்டு வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்து
ங்க சோழ தேவற்கு யா
ண்டு 49 ஆவது ஜயங்
கொண்ட சோழ மண்டல
த்து பங்கள நாட்டு தெற்கில்
வகை மேல் வேழ நாட்டு
நவிரமலை புனா நாடுடையன்
உடையான் மாதன் மகனான
தனாந வீர சோழ நவிரமலை
. . . ஆ சிவறனை
யா .. அண்ணாமலை
ட்டு கா . . றும் மே வரு வேண
ழுன் தாராவிட் டநன்

என்று கல்வெட்டு முடிவடைகிறது.

விளக்கம்
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில்,மன்னனது 49 ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி.1119),ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில்,பங்கள நாட்டுக்கு தெற்கில் உள்ள வேழ நாட்டு பகுதியில் இருக்கும் நவிரமலையில் (ஜவ்வாது மலையில்) புனா நாட்டை சார்ந்த உடையான் மாதன் என்பரின் மகனான தனான வீர சோழன் என்ற சிற்றரசன் அண்ணாமலை(சிவன்)  இறைவனுக்கு தானம் விட்ட செய்தி.கல்வெட்டின் கடைசி பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது.கல்வெட்டு வாசகம் சரியாக தெரியவில்லை.

நவிரமலை

நவிரமலை என்று பொருள். சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் நவிரமலை, நன்னன் சேய் நன்னனின் மலை எனக் கூறுகிறது. 

எனவே இன்றைய ஜவ்வாது மலைக்கே சங்க காலத்தில் நவிரமலை என்று பெயர் இருந்தது என்பதை இக்கல்வெட்டு உறுதிபட எடுத்துரைக்கிறது.


அதிலும் குறிப்பாக இன்றைக்கு வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, நெல்லி வாசல் நாடுகள் அமைந்துள்ள ஜவ்வாதுமலைக்கே நவிரமலை என்று பெயர் இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

அதிலும் குறிப்பாக பருவதமலையில் கிடைத்துள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டு, பருவதமலையே பருவதங்கிரி என்று வழங்குவதால், பருவதமலை வேறு நவிரமலை வேறு என்ற புதிய வரலாற்றுக் குறிப்பு இக்கல்வெட்டு மூலம் வெளிப்பட்டுள்ளது. 

வேழ நாட்டு நவிரமலை என்று இம்மலை அழைக்கப்பட்டதை நோக்குவது அவசியமாகிறது. ஏனென்றால் வேழம் என்பது ஆண் யானைக்கு வழங்கப்படும் செந்தமிழ்ச் சொல்லாகும். இங்கு வேழம் என்று ஆண் யானையைக் கூறுவதை விட, பொதுநிலையில் யானைகளின் கூட்டம் நிறைந்த நவிரமலை என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். 

மலைபடுகடாம் என்பது கூட யானையின் பிளிறல் ஒலி எனும் பொருளிலேயே வருகிறது. எனவே சங்க இலக்கியம் யானைக் கூட்டம் நிறைந்த நவிரமலை என்று கூறுவது இந்த ஜவ்வாது மலைப் பகுதியே என்பது இக்கல்வெட்டு மூலம் உறுதிப்படுகிறது.

உடையான் மாதன் மகன் தனான வீர சோழன்

ஜவ்வாது மலையில் உள்ள புனா நாட்டை (இன்றைய புதூர் நாடாக இருக்கலாம்) சேர்ந்த உடையான் மாதன் என்பவரது மகன் தனான வீர சோழன் ஆவார்.தந்தை சோழருக்கு அடங்கிய அதிகாரியாக இருந்திருக்கிறார் அவருக்கு பின் அவர் மகன் தனானன் வீர சோழன் ஆட்சி செய்திருக்கிறார்.

உடையான் என்பது அனைத்தும் உடையவர் என்னும் பொருள் படும்.அதாவது அந்த பகுதிக்கு மன்னர்,அதிகாரி அல்லது நாட்டார் என பொருள் படும்.

சோழ மன்னர்களுக்கும் உடையார் உடையான் என பெயருக்கு முன் வருவது குறிப்பிடத்தக்கது

சோழ மன்னர்கள் கீழ் ஆட்சி செய்பவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சோழர் பெயரை இட்டுக்கொள்வர்.அதன் படி வீர சோழன் என்னும் பெயர் இவர் கொண்டிருக்கிறார்.

பங்கள நாடு - வேலூர்,போளூர் மற்றும் செங்கம் ஜவ்வாது மலை பகுதியை உள்ளடக்கியது.
பங்களா நாட்டு தெற்கு பகுதி செங்கம் ஆகும்.மேல் வேழ நாட்டு நவிரமலை என்பது செங்கத்திற்கு மேற்கில் உள்ள யானைகள்(வேழம்) நிறைந்த நாட்டில்  நவிரமலை(ஜவ்வாது மலை) ஆகும்.

நன்றி - திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, 
மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசியர் ரே.கோவிந்தராஜ், காணிநிலம் முனிசாமி உள்ளிட்டோர்
.


சின்ன வட்டானூர் பல்லவர் கால நடுகல்,ஜவ்வாது மலை

சின்ன வட்டானூா் மீது ஏறத்தாழ 1,300 ஆண்டுகளுக்கு முன்பு பகைவா்கள் படையெடுத்து, ஊரை முற்றுகையிட்டு, ஊரையே பகைவா்கள் எரியூட்டியுள்ளனா். அப்போது இங்கு காட்டப்பட்டுள்ள மூன்று வீர மறவா்களும் வீரத்துடன் போராடி தம் ஊா் மக்களைக் காத்து, தம் உயிரை விட்டுள்ளனா். இந்தக் காட்டுப் பகுதியில் மிகப்பெரிய போா் நடைபெற்றுள்ளது. தமிழத்தின் சமவெளிப் பகுதிகளை விட, போக்குவரத்து, கல்வி, நாகரீகம் ஆகியவற்றில் குறைந்த இடமாக மதிப்பிடப்படும் மலை உச்சி ஊரில் கல்வி, எழுத்தறிவு, தொல்காப்பிய இலக்கணத்துடன் ஒரு மலை ஊா் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால், அது சிறப்பிலும் சிறப்பான ஒன்றாகும். ஜவ்வாது மலைப் பகுதி பங்கள நாட்டில் இருந்ததாக இந்த நடுகல் கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு வாசகம் ஸ்வதிஸ்ரீ பங்கள நாட்டு நவிர மலை மீள யூரும் மக்கள் எரிக்க (உ)ரு மீளப் பட்டான் என்று பொறிக்கப்பட்டுள்ளது.


பல்லவா் காலத்தில் பங்கள நாட்டில் இருந்த ‘நவிரமலை’ பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களின் மீது பகைவா்கள் படையடுத்து வந்தபோது, இவ்வூா் வீரா்கள் பட்டு (இறந்து) போயினா் என்று கல்வெட்டு உணா்த்துவதாக தெரிவித்தாா்.

நன்றி - தினமணி நாளிதழ்,திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, தொல்லியல் அறிஞா் பெ.வெங்கடேசன், காணி நிலம் மு.முனிசாமி

https://www.dinamani.com/amp/story/all-editions/edition-chennai/thirupattur/2024/Jan/03/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-8-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4132601.html

வியாழன், 7 மே, 2026

ஜவ்வாதுமலை மலையாள முதலிகள்(மலையாளி)

ஜவ்வாதுமலை மலையாள முதலிகள்

ஆங்கிலேயர் காலம் முன்பு வரையில் ஜவ்வாது மலையின் பெயர் நவிரமலை ஆகும்.யானைகள் நிறைந்த மலை என்பதால் இந்த பெயர் வந்தது.

இந்த நவிரமலை(ஜவ்வாது மலை) சோழர் ஆட்சி காலத்தில் ஆடையூர் நாட்டில் இருந்துள்ளது.இன்றும் ஆடையூர் கிராமம் மலையின் அடிவாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.

ஆடையூரை ஆட்சி செய்தவர்கள் ஆடையூர் நாடாழ்வான் என அழைக்கப்பட்டனர்.இந்த கரிகால ஆடையூர் நாடாழ்வான் குடும்பத்தில்,அரச பதவி காரணமாக அண்ணன் குடும்பத்திற்கும்,தம்பி குடும்பத்திற்கும் பகை ஏற்படுகிறது.தம்பி குடும்பத்தை ஊரை விட்டு வெளியேற்ற ஊர் மக்கள் சபதம் எடுக்கிறார்கள்.அதை கல்வெட்டி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த கல்வெட்டில் நவிரமலையில் (ஜவ்வாது மலை) உள்ள தென்பற்று நாடு (தென்மலை நாடு) மற்றும் வடமலை நாடு ஆகிய இரு மலைநாட்டு நாட்டவர்,நாட்டு முதலிகள்,மலையாள முதலிகள்,மலை அடிவாரத்து முதலிகள்,முதுநீர் மலையாளர்கள் மற்றும் மலையரண் முதலிகள் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.

சோழர் காலத்திலேயே இங்கு காராளர் இனத்தை சார்ந்த முதலியார்கள் குடியேறி இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.அதற்கு சான்றாக கார்காத்த வெள்ளாளர் குல பிரிவில் ஒன்றான பாக்குமுடையார் குல பிரிவு இன்றும் இந்த மக்களிடையே உள்ளது.

கல்வெட்டு:-

திருவண்ணாமலை மாவட்டம்,
செங்கம்.
ரிஷபேசுவரர் கோயில் வடக்குக் கருவறைச் சுவர் 11 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் ஆயிரத்து ஒரு நூற்று எண்பதின் மேல் செல்லாநின்ற ஸிம்ஹ நாயற்று அபரபக்ஷத்துத்ருதியையும் நா[ய]ற்றுக்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஆடையூர்நாட்டு எலியூற்றுக்கு மேற்கும் நம் _ _ _ _ _ _ _ க்கு உள்ளுப்பட்ட நாடும் மலையும் அடிவாரமும் தென்கரை நாடும் மூவரை வென்றநல்லூற்கு மேற்கு சிற்றிங்கை[க்]குக் கிழக்கு உட்பட்ட 
 நாடும் மலையு முட்பட்ட நாடும் இந்த இரண்டு கரைநாட்டுக்கு உள்ளுப்பட்ட நாட்டவரும் நாட்டுநாயகஞ் செய்வார்களும் மன்றாடுவார்களும் பிள்ளைமுதலிகளும் [தனி]யாட்களும் படைநாயகஞ் செய்வார்களும் தனியாள் முதலிகளும் _ _ _ _ _ _ ம்பனாயகரு _ _ _ _ _ லிகளும் கூலிச்சேவகரும் கொந்த விச்சாதிரரும் நவிரமலைத் தென்பற்று நாட்டவரும் நாட்டுமுதலிகளும் வடமலைநாட்டவரும் நாட்டுமுதலிகளு முன்னுப்பட்ட
பலசனத்தோமும் அடிவாரத்து மலையாளரும் மலையாள முதலிகளும் முதுநீர்மலையாளரும் மலையரண்முதலிகளும் செட்டிகளும் வாணிகரும் கணக்கரும் கருமப்பெரும் பன்னாட்டவரும் பன்னாட்டு முதலிகளும் பொற்கொ[ற்ற] கைக்[கோளரும் ஆண்]டார்களும் சிவப்ராஹ்மணரும் மன்றாடிகளு முவச்சரும் தென்கரைநாட்டு வடதலைநாட்டவரும் தென்மலை நாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல _ _ _ _ _ புலவ[ரு]ம் பண்
ணுவாரும் நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட பெரும் வேடரும் பாணரும் பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும் இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாதிகளு[ம்] அந்தணன் தலையாக அரிப்பான் கடையாக உள்ளுப்பட்ட அனை[த்}துச்சாதி[மா]ற்க்கு தெ _ _ _ _ ல்லாரும் __ _ _ _ _ [ண]ம் பண்ணினபடியாவது எங்கனாயனாரமட்டன் கரிகாலச்சோழ ஆடையூர் நாடாழ்வார் திருவிராச்சியம் பண்ணி எழுந்தருளி[இ]ருக்க. இவர் ஏவி அருளினபடியே இவர்கள் திருத்தம்பி
யார் நாயனார் நரசிங்கபன்மர் செய்து எழுந்தருளியிருக்க நாயனார் நரசிங்கபன்மர் மகன் பெரியுடையானும் இவன் தம்பி அர[சக]ணாயனும் கருப்புக்கட்டி நாயக்க[ருட]னே கூடி எங்கள் நாயன்[மாற்]கும் எங்களுக்கு[ம்] பகைதேடிக் கிழற்றுப்போயிருக்க இவர்கள் செய்த பிழையும் பொறுத்து இவர்கள் கூச்சந்தீ[ர்த்து]த் திருவெழுத்துச்சாத்தின திருமுகமும் குடுத்துச் செட்டிபுணை[ப]ட்டு அமைத்துவிட்ட இடத்து திருமுகமு மறுத்து எங்கள் நாயன்மாற்கு
ம் எங்களுக்கும் பகைதேடி வெறுப்பான பேருடனே கூடி எங்களுக்குப் பகையாகையினாலும். இவர்கள் பிரிதிகங்கர் வ[ழியி]லுள்ள பேராகையாலும் இப்பெரியுடையாநும் அரசகணாயனும் இவர்கள் [த]ம்பி அமட்டாழ்வானும் எங்கள் நாயன்மாற்கு இராசத்துரோகிகளும் நாட்டுத் துரோகிகளுமாய் இவர்கள் மூவரையும் பெண்டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புற[க்]கடித்தோம். பிரிதிகங்கர் மக்கள் எங்கள் நாயன்
மாற்குப் புகுந்த நம்பிராட்டியார் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளை அரசுக்குக் கொள்ளக் கடவதல்லவாகவும் அல்லாத பிள்ளைகள் பூர்வர்முறையிலே இராச்சியம் பண்ணப் கடவர்களாகவும் இம்மண்[ணு]ம் மலையு முள்ளதனையும் எங்கள் [ம]க்கள் மக்கள் வழிவழி இப்பெரியுடையானையும் அரச[கணா]யனையும் இவர்கடம்பி [அ]மட்டாழ்வாரையும், இவர்கள் மக்களி[ல்] [வழி]வழி ஒருத்தரையும் இம்மண்ணில் புகுத ஒட்டோம்
இவர்களுக்கு இடங்குடுப்பதுஞ் செய்யோம், இடங்குடுப்பாரோடு கூடுவதுஞ் செய்யோம். இவர்க[ள்] மூவரும் இம்மண்ணுக்கு உரியரென்று சொல்லு[த]ல் சொல்லுவ[ர்க்கு] இடங்குடுக்[கச்] செய்யக்கடவோமு மல்லோம். இவர்களுக்குக் கீழோலை விடுதல், இவர்களைக் கா[த்]தல், இவர்க[ள் _ _ _ _ _] சருடன் பேசுதல் செய்தாருண்டாகில் இராசத்துரோகிகளுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையா[க ரு]த்தறுக்கக்கட _ _ _ _ கவும். இவர்கள் பெண்டுகளை மூக்கு மூலையுமறுத்துவிட
 க்கடவோமாகவும். இவர்கள் பக்கல் பெண்டுகள் போனவன் குடியாக இப்படி [ஆகச்] செய்யகடவோமாகவும் இவர்கள் பக்கல் போன பேரைப் ப[ணி]செய் மக்[களை] இட்டுக் கொன்றுபோடக் கடவோமா[க]வும் இப்படிக்கு நாங்க ளனைவரும் பூணை ஓலைப்பாடியு[ம் ந]ந்திமங்கலமும் உள்ளுப்பட்ட இந்த அனைத்து[ங்] _ _ _ _ _இப்படி நிலைமைக் _ _ _ _ள் ப்ரமாணமிட்டோம்.
இப்படி அற்றுமறவும் செய்திலோமாகில் வல்லவரையன் சத்தியம் தங்களம்மைக்குத் தானே மிணாளன் அசல வன்னியர் குதிரைக்குப் புல்லுப்பறிக்கி[ற] ப[றை]யற்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாகில் படுக்க[த] ஒலைப்பாடிக்குத் தப்பினாருண்டாகில் செயங்கொண்ட நாச்சியார் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் பட்ட[ஆ]டுபட்டது படக்கடவோமாக செயங்கொண்ட நாச்சியார் திரி_ _ _ _ _ தமிட்டுச் சிங்கநாயற்று இருபத்துமூன்றா
 ந் தியதியான பஞ்சமியும் கஸ்வதியும் பெற்ற செவ்வாய்க் கிழமை நாள் ஆடுவெட்டிப் பூதமுதை[த்]து நிலைமை ப[ண்ணி] இப்படிக்குத் [தி]ருஇடவந்துறை நாயனார் கோயிலிலே கல்லும் வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம். இக் கல்வெட்டினபடிக்குத் தப்பினவன் கெங்கை குமரியிடைக் குராற்பசுக் கு[த்]தினவன் பாவங்கொள்வான். இப்படிக்கு இவனைத்து நாட்டவரும் பணிக்கக் கல்லுவெட் _ _ _ _ ய நாட்டாசாரியனேன். இவை என்னெழுத்து.


மலையாளர் – மலையகத்து வாழ்வோர், பெண்டிழந்தான் – கம்மனாட்டி, புறக்கடித்தோம் – புறக்கண்ணித்தோம், ஓடவிட்டோம், பூரவர்முறை – தந்தைக்கு பின் மூத்த மகன் நாடாளுதல் முறை. இராச்சியம் பண்ணு – அரசாளுதல், கீழோலை – நட்புத் தூது, 
அற்றுமறவும் – செய்யாமல் மறத்தல்.

விளக்கம்

வேந்தன் பெயர் குறிப்பிடாத சக ஆண்டு 1180, பொது ஆண்டு 1258 இல் பொறித்த கல்வெட்டு. அமட்டன் கரிகாலச் சோழ ஆடையூர் நாடாழ்வான் என்ற அரையன் ஆட்சி செய்துவர இவன் ஏவியபடி இவனுடைய தம்பி நரசிங்கபன்மன் ஆட்சி செய்துவர, இவனது மூன்று மகன்கள் பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகியோர் கருப்புக்கட்டி நாயகனுடன் சேர்ந்து கொண்டு இந்த சூளுரையை செய்யும் ஊரவர்க்கும் ஆடையூர் நாடாழ்வானுக்கும் இடையே பகையை வளர்த்து விடுகின்றனர். இந்த பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவர் பிரிதிகங்கரைசருடன் நட்பு கொண்டவர்கள் என்பதோடு ஆடையூர் நாடாழ்வானுக்கு இராச துரோகிகளும் நாட்டுத் துரோகிகளும் ஆனதினால் இம்மூவரையும் பெண்டிழந்தான் (மனைவி இழந்தான்) கூட்டத்தோடு ஒன்றாக்கி சூளுரைப்போர் புறக்கடித்தனர். பிரிதிகங்கரைசர் பிள்ளைகள் ஆடையூர் நாடாழ்வான் பிராட்டிக்கு பிறந்த பிள்ளைகளை மகுடம் ஏற்கமுடியாதவராக ஆக்கி அப்படி அல்லாத பிள்ளைகளை பூர்வர்முறையில் அரசாளவைத்துவிட்டனர். அதனால் இம்மண்ணும் மலையும் உள்ள காலம் வரை, எமக்குப் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் என வழிவழியாக பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவரையும் இவர்கள் பிள்ளைகள் வழிவழி ஒருவரையும் இம்மண்ணில் புகவிடமாட்டோம், இவர்களுக்கு இடம் கொடுக்கவும் மாட்டோம். இவர் மூவருக்கு இடங் கொடுப்பவரோடு நட்பு கொள்ளமாட்டோம். இம்மூவர் இம்மண்ணுக்கு உரியவரென்று சொல்பவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவர்களுக்காக தூதுபோதல், இவரைக் காத்தல், இவருடன் பேச்சு வைத்திருப்போர் ஆகியோரை இராசதுரோகிகளாக்கி நாயினும் பன்றியினும் கடையராக எண்ணி அத்தகையோர் மனைவியர் மூக்கு முலைகளை அறுத்துவிடுவோம். இம்மூவருக்காக பணிசெய்யும் மக்களை கொன்றுபோடுவோம். இப்படிக்கு பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊர் மறவர்கள் நாங்கள் மேற்கண்ட அனைத்தையும் பிரமாண செய்தோம். அப்படிச் செய்யாமல் மறந்துவிட்டோமானால் எங்கள் தாயை யாமே புணர்பவர் ஆனோம் அதோடு அசல வன்னியர் குதிரைக்கு புல்பறிக்கும் பறையருக்கு எமது மனைவிமாரை புணர விட்டவர் ஆனோம். படுக்கத ஓலைப்பாடிக்கு தப்பிச்செல்வோர் இருந்தால் செயங்கொண்ட நாச்சி கோவிலில் செவ்வாய்க் கிழமை பலிஇடப்படும் ஆடுபோல படுவோமாக என்று செய்ங்கொண்ட நாச்சியார் திருமுன்பு சபதமிட்டோம். சிங்க ராசி நிகழும் ஞாயிற்றுக் கிழமை 23 ம் நாள். பஞ்சமியான செவ்வாய்க் கிழமை ஆடுவெட்டி பூதம் உதைத்தோம். இப்படிக்கு திருஇடவந்துறை இறைவர் கோவிலில் நாங்கள் கல்வெட்டினோம். இக்கல்லில் உள்ளது படி நடவாதவன் கங்கைக்கும் குமரிக்கும் இடை வாழ்பவர் குராற்பசுவை கொன்று கொண்ட பாவத்தை கொள்வானாக.

ஆடையூர் நாடாழ்வான் தன் பிள்ளைகள் சிறியவராய் இருப்பதால் தன் தம்பியை அரசனாக பதவி ஏற்க செய்துள்ளான், அவன்பின் தன் பிள்ளை அரசராக பதவி ஏற்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு. ஆனால் தம்பி நரசிங்கபன்மன் பிள்ளைகள் தந்தைக்கு பின் மூத்தபிள்ளை என்ற முன்னைய வழிமுறைப்படி பிரிதிகங்கர் மகன்களின் உதவியோடு தாமே அரசராக ஆனதாகத் தெரிகின்றது. இதை எதிர்த்து தம் நாயகன் மீதான தமது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமாக பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் வாழ் மறவர்கள் மேற்கண்டபடி சூளுரை செய்துள்ளனர்.

பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும், பக். 138

புதன், 6 மே, 2026

கடைய முதலி,பூபாள முதலி,வரடிய முதலி

ஜவ்வாது மலை காராளர் மக்கள் பூர்வீகம்
(பேய் காட்டு பொங்கலாயி புத்தகத்திலிருந்து - வெ.நீலகண்டன்)


ஜவ்வாது மலையில் நான் களப்பணி ஆற்றிய காலத்தில் தலைமை நாட்டாராக இருந்தவர் சின்னாண்டி கவுண்டர். காணமலை உச்சியில் உள்ள மல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். மலையாளிகளின் பூர்வீகம் பற்றி அவர் அறிந்தவற்றை பகிர்ந்து கொண்டார்.

எங்களுக்கு பூர்வீகம் காஞ்சிபுரம். "ஆதிகாலத்தில கடையமுதலி, பூபாளமுதலி, வரடியமுதலி-ன்னு பல பேர்கள்ல எங்களைக் கூப்புடுவாங்க. முதல்ல மலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலப்பரப்புல தான் வாழ்ந்தோம். அசைவத்தைத் தொடமாட்டோம். ஒருமுறை, எங்களுக்கும் மலைமேல இருந்த வேடர்களுக்கும் சண்டை வந்திருச்சு. எங்க இனத்தைச் சேர்ந்த ஏழுபேரு சண்டைக்குப் போனாங்க. போகும்போது, அவங்கவங்க மனைவிமார்கிட்ட ஏழு நாளுக்குள்ள நாங்க வரலைன்னா தாலியக் கழட்டிட்டு சொல்லிட்டுப் வெள்ளைச்சேலை கட்டிக்கிங்கன்னு போயிட்டாங்க, சண்டையில ஜெயிச்சுட்டாங்க. ஆனா சண்டை முடிஞ்சு திரும்புற வழியில பயங்கர மழை. காட்டாறுகள்ல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுச்சு. அதனால ஏழுபேரும் திரும்புறதுக்கு காலதாமதம் ஆயிருச்சு. ஏழு நாளுக்குள்ள புருஷன்மாருங்க வராமப் போனதும் எங்க குல வழக்கப்படி ஏழு பொண்ணுங்களும் சடங்குகள் முடிச்சு வெள்ளைச்சேலை உடுத்திக்கிட்டாங்க . எட்டாவது நாளு, சண்டையில ஜெயிச்சு வீட்டுக்கு வந்த ஏழு பேரும் மனைவிமார்கள் வெள்ளைச்சேலை உடுத்தினதைப் பார்த்து மனசு வெறுத்துப்போயி திரும்பவும் காட்டுக்குள்ளயே போயிட்டாங்க. அங்கே வேடர் சாதிப்பொண்ணுங்க ஏழு பேரைப் பாத்து கல்யாணம கட்டிக்கிட்டாங்க. அப்படியே அசைவம் சாப்பிடுறது வேட்டையாடுறதுன்னு அவங்க பழக்க வழக்கங்களையுப் கத்துக்கிட்டாங்க. அப்படி அந்த ஏழு பேர் வழியில் பொறந்தவங்க தான் நாங்க..." என்கிறார் சின்னாண்டிக் கவுண்டர்.