காராளன் முத்து நாடன்
*இவர் இந்த மலையில் உள்ள வெள்ளார் கிராமத்தை சார்ந்தவர்.
*முத்து நாடன் என்று உள்ளதால் "முத்து நாடு" என்னும் பகுதிக்கு தலைவராக(நாட்டார்) இருந்திருக்க வேண்டும்.முத்து நாடு(முத்த நாடு,முட்ட நாடு) என்னும் பகுதி சேர்வராயன் மலையில் உள்ள மூன்று நாட்டு பிரிவுகளில் ஒன்று.இவர் அந்த பகுதிக்கு தலைவராக இருந்திருக்கலாம்.
*மூன்றாம் இராசேந்திரன் சோழன் காலத்தில்(கி.பி.1260),வெள்ளிமலை வெள்ளீஸ்வரர் கோவிலுக்கு குருணி அரிசி கொண்டு படைக்க,பன்னிரண்டு ஊரை சார்ந்தவர்கள்,வெள்ளாறு ஊர் சபையில் ஒன்று கூடி இவர் தலைமையில் முடிவு எடுக்கிறார்கள்.
*வெள்ளிமலை கல்வெட்டில் வெள்ளாருடையான் முத்து நாடன் என்று உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக