இடம் :
கரியாளூர் கல்வராயன் மலைத் தொடரிலுள்ள கிராமம். இவ்வூர் வயலில் உள்ள நடுகல்.
காலம்:
பல்லவ மன்னன் தந்திவர்மன், ஆட்சியாண்டு 4, கி.பி. 800.
செய்தி : (வட்டெழுத்துக் கல்வெட்டு)
ஆய்கைவாபாடி ஊரை சேர்ந்த வீரன் வலியார், பொன்னை சென்றது பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் ஆநிரை கவர்தல் போரில் இறந்திருக்கலாம்.
கல்வெட்டு வாசகம்:
1. ஸ்ரீகோவிசைய ஈஸ்வர தந்தி விக்கிரமர்க்கு யாண்டு நான்காவது
2. ஆய்கைவாபாடி வலியார் பொன்னைச் சென்று
(ஏற்காட்டிலுள்ள ஆரிராசன் காடு நடுகல்லிலும் சிரி வலிகையார் என்னும் பெயர் உள்ளது குறிப்பிட தக்கது)
நன்றி -ஆவணம் இதழ் 19, 2008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக