திங்கள், 23 மார்ச், 2026

கரியலூர் நடுக்கல்,கல்வராயன் மலை

இடம் : 
கரியாளூர் கல்வராயன் மலைத் தொடரிலுள்ள கிராமம். இவ்வூர் வயலில் உள்ள நடுகல்.

காலம்: 
பல்லவ மன்னன் தந்திவர்மன், ஆட்சியாண்டு 4, கி.பி. 800.

செய்தி : (வட்டெழுத்துக் கல்வெட்டு)

 ஆய்கைவாபாடி ஊரை சேர்ந்த வீரன் வலியார், பொன்னை சென்றது பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் ஆநிரை கவர்தல் போரில் இறந்திருக்கலாம்.

கல்வெட்டு வாசகம்:

1. ஸ்ரீகோவிசைய ஈஸ்வர தந்தி விக்கிரமர்க்கு யாண்டு நான்காவது

2. ஆய்கைவாபாடி வலியார் பொன்னைச் சென்று

(ஏற்காட்டிலுள்ள ஆரிராசன் காடு நடுகல்லிலும் சிரி வலிகையார் என்னும் பெயர் உள்ளது குறிப்பிட தக்கது)

நன்றி -ஆவணம் இதழ் 19, 2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக