புழுதிகுட்டை செக்கு கல்வெட்டு:
Puzhudhikuttai chekku inscription:
(இம்மலை தொடர்ச்சி மேல் பலாப்பாடி,அறுநூத்துமலை,சிறுமலை, அலரிப்பட்டி(ஆல்ரிப்பட்டி),சின்ன வேளாம் பட்டி,பெரிய வேளாம் பட்டி கிராமங்கள் உள்ளது.)
இங்கு கரி வரதராஜ பெருமாள் (கரிய பெருமாள், கரியராமர்)கோயில் உள்ளது.
இது(karalar)காராளர்(மலையாளி,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை வெள்ளாளர்) இனத்தில் குறிப்பிட்ட குலம் வழிபடும் கோவில் ஆகும். இக்கோவில் முன் கல்செக்கு கல்வெட்டு உள்ளது.இது 1000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஆகும்.
காலம்: பொ.ஆ 10 ஆம் நூற்றாண்டாகலாம்
செய்தி:
தரையிலிருந்து கல்செக்கானது 40 செ.மீ உயரமுடையது.இதன் வெளிவிட்டம் 57 செ.மீ,உள் விட்டம் 45 செ.மீ அளவுடையதாகவும் உள்ளது.
செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். உள்விட்டம் உள்ள பகுதியில் இரண்டு வரிகளில் 12 வார்த்தைகளில் கல்வெட்டானது அமைந்துள்ளது.
எழுத்தின் வடிவத்தை கொண்டு இது 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்..
*விளக்கமாறன் என்பவன் தன் மகன் மூக்கன் என்பவன் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இதுவாகும்*
*இங்கு வந்து வணங்கி பூஜை செய்பவர்களுக்கு பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றை தரும்படி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு பகுதி:-
*1. ஸ்ரீ விளக்கமாறனேன் என் மகன் மூக்கனைச்சாத்தி இட்ட செக்கு. பூசித்தனா*
*2. ற்ர்க்கு பிழி பிண்ணாக்கு மூன்று*
*சேலம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான 'மகன் நினைவு' கல்செக்கு கல்வெட்டு*
கட்டுரையாளர்:
*ஆறகளூர் பொன்.வெங்கடேசன்* (வரலாற்று ஆய்வாளர் & களப்பணியாளர்)
தமிழகத்தின் கிராமப்புறங்களில் காணப்படும் கல்செக்குகள் என்பவை வெறும் எண்ணெய் எடுக்கும் கருவிகள் மட்டுமல்ல; அவை அந்தந்த காலத்தின் சமூக, பொருளாதார மற்றும் அறநெறி சார்ந்த வரலாற்று ஆவணங்களாகும்.
நன்றி பொன் வெங்கடேசன் ஐயா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக