Chinnamangodu chekku inscription:
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம்,கல்வராயன் மலையில் கருமந்துறைக்கு வடக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ள சின்னமாங்கோடு கெக்குப் பாறைக் காட்டில் உள்ள பாறை.
கல்வெட்டு :
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரிவன்மாராகிய ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு.. திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற யாண்டாவது பதினைஞ்சாவது மிலாடாகிய சனநாதவளநாட்டு வெண்காட்டு மாலத்துறவிநாட்டுச் சிறுமாங்கோடு சடய தேவனெ அணம்பிக்கன் இடுவித்த செக்கு.
செய்தி:
11 ஆம் நூற்றாண்டில்(கி.பி.1027),முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில்,மிலாடு நாட்டில்,சனநாதவளனாட்டு பகுதியில், வெண்காட்டு மால துறவி நாட்டில் உள்ள சிறு மாங்கோடு ஊரை சார்ந்த சடையதேவன் அணம்பிக்கன்,செக்கு ஒன்றை தானமாக கொடுத்தல்.
(கல்வராயன் மலையில் காராளர்(karalar)(மலையாளி,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை வெள்ளாளர்) என்னும் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இவ்வினத்தை சார்ந்த ஒருவர் தானமாக கொடுத்த செக்கு இது.சடைய தேவன் என்ற சொல் குடும்ப மூத்த பையனாக இருக்கலாம் அல்லது பெயராக இருக்கலாம்)
நன்றி - ஆவணம் இதழ் 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக