மண்மலை என்பது பச்சைமலையின் தொடர்ச்சி ஆகும்.இம்மலையில் மலையாளி என்னும் காராள கவுண்டர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இம்மண்மலையில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில், காராள மக்களின் பல குலங்களுக்கு பொதுவான கோவிலாக உள்ளது(எ. கா: தும்புடையார் வீடு ,காடை வீடு,அய்யனார் வீடு மற்றும் இன்னும் பல),.இக்கோவில் திருவிழாவில் தேர் இழுத்து மக்கள் வழிபடுகிறார்கள்.திருவிழா முடிந்து இக்கோவில் காவல் தெய்வமான கருப்புசாமிக்கு கிடா பலியிடுகிறார்கள்.இக்கோவில் போன்று திருவெள்ளறை பெருமாள் கோவிலிலும் கருப்புசாமி காவல் தெய்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலுக்கு வந்த வேறு இனத்தை சார்ந்த வக்கீல் ஒருவர் கூறியதாவது,
இப்பெருமாள் தெய்வம் முகலாயர்கள் படையெடுப்பின் போது திருவெள்ளறை ஊரிலிருந்து பெருமாளின் சிலையை பாதுகாப்பதற்காக இம்மலைக்கு எடுத்து வந்ததாக கூறினார்.இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக