திங்கள், 1 செப்டம்பர், 2025

மலையாளி பழங்குடியின் குடியேற்ற காலம் மற்றும் பிற பெயர்கள்(Malaiyali Tribe's Settlement period and it's many names)

International Journal of Advanced Education and Research,2018 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வு கட்டுரை



கல்வராயன் மலைகளில் மலையாளிகளின் தோற்றம் பற்றிய பல்வேறு பதிப்புகள் உள்ளன. பாரமஹால் பதிவுகள் இந்த சிறிய குறிப்பைத் தவிர அவற்றின் தோற்றம் பற்றிய எந்தக் கணக்கையும் கொடுக்கவில்லை: 'பாரம்பரியம் இல்லை'. பெரிய-கல்ராயன் மலைக் கல்வெட்டுகளின்படி, இவர்கள் பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அங்கு வசித்து வந்தனர்.

 மலையாளி பழங்குடியினர் வெவ்வேறு மலைக் குழுக்களில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளனர். பாரமஹால் பதிவுகளில், அவர்கள் 'மலையாண்டி வெள்ளாலு' என்று அழைக்கப்படுகிறார்கள். மலை வெள்ளாளர், கொங்கு வேளாளர், காஞ்சிமண்டலத்தார், மலைக்காரன், மலை கவுண்டன், மலை நாயக்கன், மலையாள, மலையாளன், காரைக்காட்டு வெள்ளாளன், காராள வெள்ளாளன், காஞ்சிமண்டல வெள்ளாளன், காராளன் ஆகியோர் இவர்களது பிற பெயர் பண்பாடுகளாகும். சுவாரஸ்யமாக, அனைவருக்கும் 'கவுண்டன்' இரண்டாவது பெயராக உள்ளது, அவர்களைப் புகழ்ந்து பேசும்போது உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு பெயர்கள் இருந்தபோதிலும், அவர்கள் மலையகத்தில் குடியேறிய பின்னர், தமக்கென தனித்துவமான சில உள்ளூர் பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொண்ட சாதாரண தமிழ் பேசும் மக்களாக இருப்பதால், அவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவதில்லை. கல்ராயன் மலைகள் இரண்டு ஜாகிர்கள்-பெரிய-கல்ராயன் மற்றும் சின்ன கல்ராயன் என பிரிக்கப்பட்டது. முந்தையது கீழ்நாடு மற்றும் மேல்நாடு எனப் பிரிக்கப்பட்டு முறையே 19 மற்றும் 17 கிராமங்களை உள்ளடக்கியது. பிந்தையது, 45 கிராமங்களை உள்ளடக்கியது, வட நாடு மற்றும் தேன் நாடு என பிரிக்கப்பட்டது.

வரதராச பெருமாள் கோவில்,மண்மலை



மண்மலை என்பது பச்சைமலையின் தொடர்ச்சி ஆகும்.இம்மலையில் மலையாளி என்னும் காராள கவுண்டர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இம்மண்மலையில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில், காராள மக்களின் பல குலங்களுக்கு பொதுவான கோவிலாக உள்ளது(எ. கா: தும்புடையார் வீடு ,காடை வீடு,அய்யனார் வீடு மற்றும் இன்னும் பல),.இக்கோவில் திருவிழாவில் தேர் இழுத்து மக்கள் வழிபடுகிறார்கள்.திருவிழா முடிந்து இக்கோவில் காவல் தெய்வமான கருப்புசாமிக்கு கிடா பலியிடுகிறார்கள்.இக்கோவில் போன்று திருவெள்ளறை பெருமாள் கோவிலிலும் கருப்புசாமி காவல் தெய்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலுக்கு வந்த வேறு இனத்தை சார்ந்த வக்கீல் ஒருவர் கூறியதாவது,
இப்பெருமாள் தெய்வம் முகலாயர்கள் படையெடுப்பின் போது திருவெள்ளறை ஊரிலிருந்து பெருமாளின் சிலையை பாதுகாப்பதற்காக இம்மலைக்கு எடுத்து வந்ததாக கூறினார்.இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தென்செட்டி ஏந்தல்,மலையாள கவுண்டர்களின் தாய் கடவுள்

விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலையை ஒட்டி உள்ளது தென்செட்டி ஏந்தல் கிராமம். கல்வராயன் மலைப்பகுதியானது தென்மேற்கே சேலம் மாவட்டத்தையும், வடக்கே திருவண்ணாமலை மாவட்டத்தையும், கிழக்கே விழுப்புரம் மாவட்டத்தையும் கொண்டது. இந்த மலைப்பகுதியை ஜாகீர்தார்கள் என்ற வம்சாவழியினர் பரம்பரையாக ஆண்டு வந்தனர். இப்பகுதி மலைவாழ் மக்களும்(காராளர் என்னும் மலையாளி மக்கள்), அதையொட்டி வாழ்ந்த கிராம மக்களும் ஜாகீர்தார்களை தங்கள் இனத்தின் முன்னோடிகளாகவும். தங்களை ஆளும் சிற்றரசர்களாகவும் எண்ணி மிகுந்த பயபக்தியோடும், மரியாதையோடும் அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். 1975-ல் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதுதான் இந்த கல்வராயன் மலைப்பகுதி ஜாகீர்தார்கள் கட்டுப்பாட்டில் இருந்து அரசின் கட்டுபாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஜாகீர்தார் வம்சா வழியினரைச் சேர்ந்தவர்கள்தான் காலம் சென்ற பெரிய சடையப்பர், சின்ன சடையப்பர் மற்றும் அவர்களது தாயார் மஞ்சு நாச்சியம்மன் ஆகியோர். இவர்களையே தங்களைக் காக்கும் எல்லை தெய்வங்களாக வணங்கி வருகிறார்கள் இங்குள்ள கிராம மக்கள்.
தலபெருமை:
பெரிய சடையப்பருக்கு யானை வாகனமும், சின்ன சடையப்பருக்கு குதிரை வாகனமும் உள்ளன. இவற்றின்மீது வேட்டைக்குப் போகும் இவர்களுக்கு ஆணிகள் பொருத்திய காலணிகள் உண்டு. இந்த தெய்வங்களை நம்பி வந்து தங்கள் குறைகளைச் சொல்லி தீர்வு வேண்டினால், அவற்றை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்கள். பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த ஒரு தம்பதிகள் இந்த தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டபோது குழந்தைப்பேறு கிடைத்தது. இதற்கு நன்றிக்கடனாக மூன்று பவுன் தாலிச் சங்கிலியை காணிக்கையாகக் கொண்டு வந்து செலுத்தினார்கள். இப்படிப்பட்ட சக்திமிக்க தெய்வங்களை சேலம், கடலுர், பெரம்பலூர், சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, கரூர், தம்மம்பட்டி, வயலூர், திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இவ்வூரில் உள்ள எல்லா மக்களும் இத்தெய்வங்களை மிகுந்த பக்தியோடும் கட்டுப்பாடுகளோடும் வழிபட்டு வருகின்றனர். முன்காலத்தில் இந்த ஊரில் பட்டுநூல் தயாரித்த செட்டியார் இன மக்கள் அதிகம்பேர் வாழ்ந்துள்ளனர். அதனால்தான் இந்த ஊருக்கு செட்டி ஏந்தல் என்ற பெயர் உருவானது. இதேபோல் சங்கராபுரம் அருகே ஒரு செட்டிஏந்தல் கிராமம் உள்ளது. அதனால் அந்த ஊருக்கு வடசெட்டிஏந்தல் என்றும், எங்கள் ஊரை தென்செட்டி ஏந்தல் என்றும் அழைக்கிறார்கள்.
இங்கு வந்து குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்கும் மக்கள், தாங்கள் வேண்டியது நிறைவேறியதும் சாமியிடம் சொன்ன பரிகாரத்தின்படி நிறைவேற்றாவிட்டால், தானே சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் சடையப்பர்கள். ஆண்டாண்டுகாலமாக அக்கம் பக்கம் உள்ள எத்தனையோ ஊர்களில் காலரா பரவி பலர் இறந்துள்ளனர். ஆனால் சடையப்பர் கோவில் கொண்டுள்ள எங்கள் ஊரில் மட்டும் அன்று முதல் இன்று வரை யாருக்கும் காலரா வந்ததே இல்லை என்கிறார்கள் இவர்கள்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோயில் பூசாரியாக இருந்தவர் மீது ஒரு திருட்டு வழக்கு ஏற்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அந்த திருட்டு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பூசாரி புலம்பியபடியே இருந்தார். இதைக் கவனித்த நீதிபதி பூசாரியிடம் விசாரித்தார்.
அதற்கு பூசாரி, அய்யா! நான் பூஜை செய்யும் கோயில் சாமிகளுக்கு இன்றைக்கு மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்தெய்வங்களுக்கு மாசிமகத்தன்று நடைபெறும் திருவிழாதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட திருவிழாவில் சாமிகளுடன் உடனிருந்து அலங்காரம் செய்யவும், பூஜை செய்யவும் என்னால் போக முடியவில்லையே! அதை நினைத்துதான் புலம்புகிறேன். சக்தியுள்ள அந்த சாமிகள் என்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச்செல்ல வருவார்கள் என்று நம்பியுள்ளேன் என்றார். அதைக் கேட்ட நீதிபதி, அவ்வளவு சக்தியுள்ளதா உங்கள் சாமி? அப்படியானால் அந்த சாமிக்கு நான் ஒரு சோதனை வைக்கிறேன். அந்த சாமிக்கு சக்தி இருந்தால் அதைக் கண்டுபிடிக்கட்டும். அப்படி கண்டுபிடித்துவிட்டால் திருவிழா பணிக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். இந்த செய்தி ஊருக்குத் தெரிவிக்கப்பட்டது.
தென்செட்டி ஏந்தல் ஊரின் முக்கியஸ்தர்கள் எட்டு பேர் சடையப்ப சாமியை தோளில் சுமந்தபடி நீதிமன்றத்துக்குப் புறப்பட்டனர். இந்த நிலையில் நீதிபதி தனது உதவியாளர்களோடு விபூதி, குங்குமம், எலுமிச்சம்பழம் ஆகிய மூன்றையும் பொட்டலமாகக் கட்டி, அருகிலுள்ள கோமுகி ஆற்றுக்குச் சென்று அங்குள்ள மணலில் புதைத்து வைத்துவிட்டு வந்துவிட்டார். சாமியை சுமந்தபடி நீதிமன்றம் முன்பு வந்து நின்றார்கள் தென்செட்டி ஏந்தல் சாமிதூக்கிகள்.அப்போது நீதிபதி அவர்களிடம், நான் மறைத்து வைத்துள்ள பொருட்களை உங்கள் சாமி கண்டு எடுக்கட்டும் என

வரதராஜ பெருமாள் கோவில்,மதூர்(Varadharaja Perumal Temple,madhoor)

Varadharaja Perumal Temple,Madhoor.

       Thiru Varadharaja Perumal Temple,Madhoor.


                          மதூர்(madhoor) கிராமம் சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியத்தில் உள்ளது.இக்கிராமத்தில் பழமைவாய்ந்த திரு வரதராச பெருமாள் கோவில் உள்ளது.இக்கடவுளை காராளர் (மலையாளி அல்லது மலையாள கவுண்டர்) இனத்தில் தும்புடையார் வீடு(குலம்) தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.இவர்கள் பச்சை மலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து சேர்வராயன் மலையில் குடியேறிய கூட்டம் ஆகும்.
                            
                               இக்கோவில் பூசாரியாக காடை குலத்தில் ஒருவர் உள்ளார்.இக்காடைக்குலக் கூட்டம் வலசையூர் பக்கத்திலுள்ள கவுண்டம்பட்டியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த கூட்டம் ஆகும்.இருப்பினும் இவர்களின் பூர்வீகமும் பச்சைமலை ஆகும்.
                தும்புடையார் குலத்தாரின் பூசையில் திருப்தியடையாத கடவுள் காடை குலத்தார்க்கு பூசை உரிமை கொடுக்க வேண்டும் என்று பில்லேரி கிராமத்தில் உள்ள பெரியண்ணன் கூட்டத்தை சேர்ந்த ஒருவரின் கனவில் கூற,அவர் இச்செய்தியை மதூர் கிராமத்தாரிடம் கூற,அச்சமயத்தில் சில நாட்கள் கழித்து காடை குலத்தார் பிழைப்பு தேடி மதூருக்கு வந்தபொழுது,மதூர் கிராமத்தினர் கனவு கண்ட செய்தியை கூறுகின்றனர்.அவர்களும் அவர்களின் கனவில் வரதராச பெருமாள்" பூசை உரிமை கிடைக்கும்போது அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியதாக கூற,தும்புடையார் குலத்தார் அவர்களுக்கு பெண் கொடுத்து,இருக்க இடம் கொடுத்து,கோவில் பூசை உரிமையும் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார் மதூரை சேர்ந்த வடம கவுண்டர்.
                காடை குலத்தாரின் குலதெய்வம் மண்மலை திரு வரதராச பெருமாள் ஆகும்.தும்படையார் குலத்திற்கும் காடைகுலத்தார்க்கும் ஒரே தெய்வம் குலதெய்வமாக இருக்கும் போது எப்படி தும்புடையார் குலம் பெண் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை.இது ஆராய்ச்சிக்கு உட்பட வேண்டியது.